வீட்டில் குறையாமல் இருக்க வேண்டிய பொருட்கள்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வீட்டில் எந்த பொருட்களை தீராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் என்ன தான் அதிகமாக சம்பாதித்து வீட்டில் வைத்தாலும் அதில் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியாத அளவிற்கு செலவு என்பது அதிகரித்து கொண்டே இருக்கும். இது எல்லோரது வீட்டிலும் நடக்க கூடியது என்றாலும், ஒரு சில வீடுகளில் இந்நிலை தொடர்ந்துகொண்டே இருக்கும். அல்லது அதிகரித்து கொண்டே இருக்கும். இதனால், குடும்பத்தில் நிம்மதியின்மை, மகிழ்ச்சியின்மை போன்றவை ஏற்படும்.
வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சனை, சண்டை சச்சரவுகள் இது அனைத்திற்கும் வீட்டில் உள்ள தரித்திரியம் தான் காரணமாக இருக்கும். அதாவது, நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒரு சில விஷயங்கள் குடும்பத்தில் கஷ்டத்தை ஏற்படுத்தும். ஆகையால், வீட்டில் கஷ்டங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களில் ஒரு சில பொருட்களை மட்டும் நாம் தீராமல் பார்த்து கொள்ள வேண்டும். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீட்டில் செல்வம் செழிக்க எளிமையான கல் உப்பு பரிகாரம்..!
வீட்டில் இந்த பொருட்களை மட்டும் தீரும் முன்பே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்:
கல் உப்பு:
கல் உப்பு மஹாலஷ்மியின் கடாட்சமாக கருதப்படுகிறது. ஆன்மீகத்தில் கல் உப்பிற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. ஆகையால். வீட்டில் கல் உப்பை தீராமல் பார்த்து கொள்ள வேண்டும். கல் உப்பு தீரும் முன்பாகவே, நீங்கள் புதிதாக கல் உப்பை வாங்கி வைத்து கொள்ளவும். உப்பு தீர்ந்ததும், உப்பு பாத்திரத்தை கழுவி விட்டு வாங்கி வந்த உப்பை அதில் கொட்டி விட வேண்டும். கல் உப்பு வாங்கும்போது வெள்ளிக்கிழமையாக பார்த்து வாங்குவது இன்னும் சிறப்பு வாய்ந்தது ஆகும். வீட்டில் எதிர்பாராமல் கூட கல் உப்பை தீர விடக்கூடாது. ஒருவேளை நீங்கள் கல் உப்பை வாங்க மறந்துவிட்டால் உங்களுக்கு ஏதோவொரு பணப்பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம் ஆகும்.
அரிசி:
வீட்டில் தீராமல் இருக்க வேண்டிய பொருட்களில் இரண்டாவதாக இருப்பது அரிசி தான். அரிசியை என்றுமே குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மஞ்சள் குங்குமம்:
மஞ்சள் குங்குமத்தை எப்போதும் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். மங்களகரமான பொருட்களான மஞ்சள், குங்குமமானது நெற்றியில் வைத்து கொள்ளக் கூடியது. ஆகையால் இந்த பொருட்களை ஒரு போதும் சுத்தமாக காலி ஆகாமால் பார்த்து கொள்ள வேண்டும். முக்கியமாக, வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போது அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
இதனையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் உள்ள தரித்திரியம் நீங்கி செல்வ வளம் பெருகும். எனவே, வீட்டில் எப்போதும் கல் உப்பு, அரிசி மற்றும் மஞ்சள் குங்குமம் போன்ற பொருட்களை குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்க கூடாத பொருட்கள் மீறி வைத்திருந்தால் பணம் கஷ்டம் தான்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |