Karadaiyan Nombu Adai Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. Karadaiyan Nombu பற்றி நம் அனைவருக்குமே தெரியும். குறிப்பாக, பெண்கள் அனைவருக்கும் தெரியும். காரடையான் நோன்பு என்பது, பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக இறைவனை பிராத்தனை செய்யும் முறை ஆகும்.
இந்நாளில் பெண்கள் Karadaiyan Nombu Adai ரெசிபி செய்து வழிப்படுவது வழக்கம். எனவே, அந்த வகையில் புதிதாக காரடையான் நோன்பு இருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.?
Ingredients
- காராமணி - 1/2 கப்
- வெல்லம் - கப்
- அரிசி மாவு - 2 கப்
- ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல் -1/2 கப்
- நெய் - 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி துருவியது - 1 ஸ்பூன்
Instructions
காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.?
வெல்ல அடை செய்வது எப்படி.?
- முதலில், காராமணியை நன்கு ஊறவைத்து ஒன்றிற்கு இரண்டு முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி, அதனை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
- அடுத்து, ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் 1 கப் வெல்லம் சேர்த்து அதனுடன் 11/2 கப் சூடான நீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
- இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் 2 கப் அரிசி மாவினை சேர்த்து அடுப்பு தீயை மிதமான அளவில் வைத்து 2 நிமிடம் வரை லேசாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
- அடுப்பில், ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல தண்ணீரை சேர்த்து கொள்ளுங்கள். வெல்ல தண்ணீர் லேசாக கொதித்துவரும் நிலையில் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடுங்கள்.
- அதன் பிறகு, இதனுடன் வேகவைத்துள்ள காராமணி 1/4 கப் மற்றும் தேங்காய் துருவல் 1/4 கப் சேர்த்து கலந்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
- நன்றாக கொதித்ததும் , அதில் வைத்துள்ள அரிசி மாவினை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்நிலையில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
- மாவு கையில் ஒட்டாத அளவிற்கு வந்ததும் அடுப்பினை ஆஃப் செய்துவிட்டு ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆறவைத்து அடையாக தட்டி கொள்ளுங்கள்.
- இப்போது, இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி, அதில் அடையை வைத்து 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான காரடையான் நோன்பு வெல்ல அடை தயார்..!
உப்பு அடை செய்வது எப்படி.?
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 ஸ்பூன் தேங்காய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் 1/2 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.
- கடுகு பொரிந்ததும், அதில் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு, பச்சைமிளகாய் ஒன்று மற்றும் துருவிய இஞ்சி 1 ஸ்பூன் சேர்த்து கலந்து விடுங்கள்.
- அடுத்து, இதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். கொதித்ததும் அதில், வேக வைத்துள்ள காராமணி 1/4 கப் சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.
- இந்நிலையில், வறுத்து வைத்துள்ள அரிசி மாவினை சேர்த்து கட்டி இல்லமால் நன்றாக கலந்து விடுங்கள்.
- மாவு கையில் ஒட்டாத அளவிற்கு வந்ததும் அடுப்பினை ஆஃப் செய்துவிட்டு ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆறவைத்து அடையாக தட்டி கொள்ளுங்கள்.
- இப்போது, இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி, அதில் அடையை வைத்து 7 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான காரடையான் நோன்பு உப்பு அடை தயார்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |