Fertilizer For Kakkattan Plant in Tamil
நாம் அனைவருமே வீட்டில் ரோஜா செடி, மல்லிகை செடி, முல்லை செடி மற்றும் செம்பருத்தி செடி என பலவகையான செடிகளை வளர்த்து வருவோம். ஆனால் இதனை எப்படி பராமரிப்பது என்பது நமக்கு தெரியாது. அதாவது, பூச்செடிக்கு என்ன உரம் கொடுக்க வேண்டும்.? எப்போது கொடுக்க வேண்டும்.? போன்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். அதிலும் குறிப்பாக, மற்ற செடிகளை விட காக்கட்டான் செடியை எப்படி அதிகமாக பூக்க வைப்பது.? அந்த செடியை எப்படி பராமரிப்பது போன்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். எனவே இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் காக்கட்டான் செடி அதிகமாக பூக்க என்ன உரம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
காக்கட்டான் செடி அதிகமாக பூக்க:
காக்கட்டான் செடி அதிகமாக பூக்க வேண்டுமென்றால், முதலில் காக்கட்டான் செடியை கவாத்து செய்து விடுதல் வேண்டும். அதாவது, செடியின் பக்க கிளைகள் மற்றும் காய்ந்த கிளைகளை வெட்டி விட வேண்டும். அப்போதுதான், காக்கட்டான் செடி அதிக சத்துக்களை எடுத்து அதிகமாக பூக்க தொடங்கும்.
அடுத்து, காக்கட்டான் செடிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு எப்சம் உப்பை உரமாக கொடுக்க வேண்டும். அதாவது, காக்கட்டான் செடியின் வேர்ப்பகுதியில் 1 ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காக்கட்டான் செடி அதிகமாக பூக்கும்.
சின்னதாக இருக்கும் முல்லை செடியிலும் 1000 மொட்டுகள் வரை வைக்க பழைய சோறு மட்டும் போதும்
காக்கட்டான் செடி செம்பட்ம்பர் முதல் மே வரை அதிகமாக பூக்கும். அந்த காலத்தில் காக்கட்டான் செடிக்கு தொழுஉரம் கொடுத்து வாரத்திற்கு ஒருமுறை மண்ணை நன்கு கிளறி விட வேண்டும்.
மேலும், கடலை புண்ணாக்கு கரைசலையும் உரமாக கொடுக்கலாம். காக்கட்டான் செடியில் பூச்சி தாக்குதல் ஏதும் இருப்பினும் அதற்கு வேப்ப எண்ணெய்யையும் கோமியத்தையும் தெளித்து விட வேண்டும்.
அதாவது, சிறிதளவு வேப்ப எண்ணெய் மற்றும் கோமியத்தை கலந்து ஒரு நாள் வரை அப்படியே வைத்து விடுங்கள். அடுத்த நாள் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து காக்கட்டான் செடிக்கு தெளித்துவிட விட வேண்டும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |