மல்லி பூ செடி வளர்ப்பது எப்படி.?
பூக்களைப்பிடிக்காதவர்கள் உலகில் யாருமே இருக்க முடியாது. காய்கறி செடிகளை வளர்க்காதவர்கள் கூட இரண்டு பூச்செடிகளை வீட்டில் வைத்து வளர்க்க ஆசைப்படுவார்கள். பூக்களின் மணமும், அழகும் பார்பவர்கள் கண்களுக்கும், மனதிற்கும் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் அளிக்கக்கூடியது. அதனால் பூச்செடிகளை ஆசையாக வாங்கி வந்து வளர்ப்பார்கள்.
ஆனாலும் சில பேர் வைக்கும் செடியில் பூக்கள் பூத்து குலுங்கும். சில பேர் வைக்கும் செடியில் பூக்களே பூக்கவில்லை என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். செடியில் அதிக பூக்க பூப்பதற்கு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் மல்லிகை பூச்செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும்என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மண் கலவை:
மல்லி பூச்செடியில் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு மண் கலவை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு செம்மண்ணை பயன்படுத்துவது நல்லது. இந்த மண்ணில் உரம் போட வேண்டும். குறிப்பாக வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு இந்த இரண்டையும் செடிகளுக்கு உரமாக கொடுக்கலாம். ஐயாவை இரண்டையும் செடி வைப்பதற்கு முன்பே மண்ணில் போட்டு கிளறி விட வேண்டும். அதன் பிறகு செடிகளை வைக்க வேண்டும்.
இந்த 15 நாட்களுக்கு செடியில் போட்டு மண்ணை கிளறி விட வேண்டும். இப்படி செய்வதினால் செடிகள் ஆனது செழிப்பாக வளருவதற்கு உதவி செய்கிறது.
வீட்டிற்குள்ளேயே தக்காளி செடி ஈசியாக வளர்க்கலாம்..
உரம்:
வீட்டில் எந்த செடியாக இருந்தாலும் அதற்கு உரம் போட்டால் தான் அவை செழிப்பாக வளரும். அந்த வகையில் மல்லிகை பூச்செடி வளருவதற்கு வெங்காய தோல் உரம் சிறந்ததாக இருக்கும்.
வெங்காய தோலை தண்ணீரில் சேர்த்து ஒரு மூடி போட்ட டப்பாவில் சேர்த்து மூன்று நாட்களுக்கு உர விட வேண்டும். இதனை அப்படியே விடாமல் தினமும் கிளறி விட வேண்டும்.
மூன்று நாட்கள் கழித்து இந்த உரத்தில் தண்ணீர் சேர்த்து செடியின் வேர்பகுதியில் ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரை வாரத்தில் ஒரு நாள் ஊற்றி வர வேண்டும். இந்த உரம் கொடுப்பதால் தண்ணீர் ஊற்றாமல்இருக்காதீர்கள். தண்ணீர் தினசரி ஊற்றுவது அவசியமானது.
இது இல்லாமல் அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றாமல் செடியின் வேர் பகுதியில் ஊற்றி வாருங்கள். இந்த உரங்களின் மூலம் செடி ஆரோக்கியமாக வளர்ந்து அதிலிருந்து மொட்டுகள் அதிகமாக வைப்பதற்கு உதவி செய்கிறது.
ஜாதி மல்லி வருடம் முழுவதும் பூத்து குலுங்க வெங்காயம் ஒன்று போதும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |