பணம் சேர என்ன செய்ய வேண்டும்
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் பணம் சேர என்ன செய்ய வேண்டும் என்பது தான் இந்த பதிவு. பொதுவாக கஷ்டம் என்றால் நாம் என்ன செய்வோம் கடவுளிடம் சொல்லி மனம் ஆற வேண்டிக்கொள்வோம்.
இல்லையென்றால் பணம் இல்லாத கஷ்டத்தில் சாமியை கும்பிட மறந்து விடுவோம். வெறுத்துவிடுவோம். ஆனால் அந்த காலத்தில் என்னதான் நடந்தாலும் கடவுளை வணங்குவதை விட மாட்டார்கள், அதேபோல் அந்த காலத்து ராஜாக்கள் அனைவருமே சில மாந்திரிக தாந்திரீகத்தை செய்வார்கள். அதனால் தான் எவ்வவோ தெரியவில்லை அவர்கள் வாழ்க்கை செல்வ செழிப்பாக இருந்தது போல வாங்க நாமும் வீட்டில் ஒரு பரிகாரத்தை செய்வோம்.
பணம் சேர என்ன செய்ய வேண்டும்:
வெற்றியை தேடி தருவது சில பூஜைகளும் பரிகாரமும் தாந்திரீகமும் ஆதிகாலத்திலிருந்து செய்து வெற்றி பெறுவார்கள். அது அவர்களின் முயற்சியாக இருந்தாலும் பூஜைக்கு ஒரு முதன்மை இருக்கிறது என்று இன்றுவரையில் நம்பி தான் வருகிறார்கள்.
அதனை நாம் சரியான முறையில் பயன்ப்படுத்திக்கொண்டோம் என்றால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். அந்த வரிசையில் நம் வீட்டில் பணம் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்..!
இது ஒரு சுலபமான பரிகாரம் ஆகும் இதனை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எந்த ஒரு பலனும் செய்தவுடன் பலன் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.
ஒரு பிரச்சனைக்கு பல பரிகாரம் செய்ய சொல்லாலும் நம்மால் முடிந்த விஷயம் எது என்பதை தான் இங்கு பார்க்க போகிறோம்.
முதலில் ஒரு செம்பு பாத்திரம் எடுத்துக்கொள்ளவும். வேறு எந்த ஒரு உலோக பாத்திரத்தையும் பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்தினால் விரைவில் பலன் கொடுக்காது.
அந்த செம்பு பாத்திரத்தில் ஒரு கல் உப்பு, சர்க்கரை பச்சரிசி, ஒரு ரூபாய் நாணயம் இது அனைத்தையும் அந்த செம்பு பாத்திரத்தில் நிரப்பி வைக்க வேண்டும்.
அதாவது முதலில் நீங்கள் எடுத்துக்கொண்ட செம்பு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டரில் எதோ ஒன்று சேர்க்கவும்,
அதன் பின்பு பச்சை அரிசி 2 கைப்பிடி அளவு எடுத்து அதன் மீது 5 ரூபாய் அல்லது 1 ரூபாய் வைக்கவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 எப்பேர்ப்பட்ட ஏழை கூட பணக்காரராக மாற்றும் வசம்பு..! பணம் பெருக வசம்பை உங்கள் வீட்டில் இப்படி வையுங்கள்..!
இதில் சேர்க்கப்படும் பொருட்கள் உங்கள் விருப்பம் தான் முக்கியமாக பச்சரிசி மட்டும் 2 கைப்பிடி சேர்த்துக்கொள்ளலாம். இதை எந்த கிழமையில் வேண்டுமாலும் செய்யலாம். குறிப்பாக வியாழன் கிழமை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் செய்த வந்த பொருட்களை பூஜை அறையில் மகாலட்சுமிக்கு முன்பாக வைத்துவிடவேண்டும்.
அதன் பின் நீங்கள் எத்தனை நாட்கள் செய்கிறீர்களோ அதிலிருக்குது 7 நாட்களிலில் நீங்கள் அந்த பொருட்களை புதிதாக மாற்றி வைக்கவேண்டும். அதிலிருந்து எடுத்த பொருட்களை காக்கை, குருவிகளுக்கு உணவாக கொடுக்கலாம். இதனை தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம். வீட்டில் செய்தால் நீங்கள் வைத்திருக்கும் பணம் வீணாக செலவு ஆகாமல் பணம் சேரவும் வழி செய்யும்.
இதையும் செய்யுங்கள் 👉👉 அரிசி பானையில் இந்த பொருளை வைத்தால் போதும் வீட்டில் பணம் பலமடங்கு சேரும்.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |