அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும்..!

Advertisement

Curry Leaves Oil For Hair Growth

ஹலோ நண்பர்களே..! பொதுவாக பெண்கள் அனைவருக்கும் இருக்க கூடிய மிகப்பெரிய ஆசை முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்பது தான். ஆனால் பலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை, பொடுகு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றது. அதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் இன்று இல்லையென்றாலும் நாளை பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் முடிக்கும் சரி முகத்திற்கும் சரி இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில் இன்று அளந்து பார்க்கும் அளவிற்கு முடி வளர வைக்கும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Curry Leaves Oil For Hair Growth in Tamil: 

  1. தேங்காய் எண்ணெய் – 200 ml 
  2. கருவேப்பிலை – 1 கப்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருவேப்பிலை எடுத்து கொள்ளவும்:

 Curry Leaves

முதலில் கருவேப்பிலை 1 கப் அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதை சுத்தமாக கழுவி ஒரு துணியில் ஈரம் இல்லாமல் உலரவைக்க வேண்டும்.

கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றன. இது வேரிலிருந்து புதிய முடி வளர உதவி செய்கிறது. மேலும் முடியை கருமையாகவும் நீளமாகவும் வளர வைக்கிறது. அதனால் கருவேப்பிலை எடுத்து கொள்ள வேண்டும்.

அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

டேப் வைத்து அளந்து பார்க்கும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேர்த்து தடவுங்க போதும் 

கடாய் எடுத்து கொள்ளவும்:

தேங்காய் எண்ணெய்

அடுத்து 200 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். முடியின் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் தான் முக்கியமான ஒன்றாக உள்ளது.

அடுத்து ஒரு கடாயை எடுத்து கொள்ள வேண்டும். அதை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பொடியை அதில் போட்டு கலந்து விட வேண்டும்.

எண்ணெயை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின் எண்ணெய் கொதிப்பது அடங்கி நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் எண்ணெயை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியின் அடிப்பகுதி வரை நன்றாக தடவ வேண்டும். இதுபோல பயன்படுத்தி வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

காது ஓட்டை பெரிதாகி விட்டதே என்று கவலைப்படுபவர்கள் இதை மட்டும் செய்யுங்க நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement