உங்க முகம் நிலவை போல் நன்கு பொலிவுடன் காட்சியளிக்க வேண்டுமா..? அப்போ தயிருடன் இந்த பொருட்களை கலந்து தடவுங்கள் போதும்..!

Advertisement

Face Glow Natural Tips in Tamil

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி தங்களின் முகத்தை நன்கு அழகாக பராமரிக்க வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக நமது முகத்தில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் நமது முகம் பொலிவிழந்து காணப்படுவது. அப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு பொலிவு பெற செய்வதற்கு நாமும் பல வகையான செயற்கையான முயற்சிகளை மேற்கொள்வோம்.

ஆனால் அவையாவும் நமக்கு நல்ல பலனை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் முகத்தை பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் தான் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Face Whitening Tips at Home Naturally in Tamil:

Face Whitening Tips at Home Naturally in Tamil

இயற்கையான முறையில் உங்களின் முகத்தை பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் அறிந்து கொள்ளலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. தயிர் – 1 டீஸ்பூன்
  3. தேன் – 1 டீஸ்பூன்
  4. கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து  கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 24 மணி நேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா அப்போ ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்

தயிரை சேர்க்கவும்:

பின்னர் நாம் வறுத்து எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூளில் இருந்து 1 டீஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து  கொள்ளுங்கள்.

தேனை கலக்கவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ச்சியான நீரில் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவுடன் இருக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> அடிக்கிற வெயிலில் உங்களின் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement