முடி நீளமாக வளர என்ன செய்வது
பொதுவாக அனைவரிடமும் உள்ள ஒரு இயல்பான கேள்வி என்னவென்றால் முடி நீளமாக வளர என்ன செய்வது என்று தான். ஏனென்றால் முடி உதிர்வு பிரச்சனையும் முடி வளரவில்லை என்ற பிரச்சனையும் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று கடையில் கிடைக்க கூடிய மற்றும் அக்கம் பக்கத்தினர் சொல்ல கூடிய எல்லாவற்றையும் தலைக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் முழுமையான பலனை அளிப்பதும் இல்லை மற்றும் முடியை வலுவிழக்கவும் செய்கிறது. ஆகவே உங்களுடைய தலை முடி Strong ஆகவும் மற்றும் நீளமாகவும் வளர எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தினால் போதும். சரி வாருங்கள் அது என்ன ஹேர் பேக் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Grow Long Hair Fast Naturally at Home:
அரிசி கழுவும் தண்ணீரை வைத்து எளிமையான முறையில் முடியை நீளமாக வளர செய்வதற்கு ஒரு ஹேர் பேக் தயார் செய்ய வேண்டும்.
அரிசில் உள்ள வைட்டமின் B6, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. அதனால் இதனை முடிக்கு அப்ளை செய்யும் முடி நன்றாக ஆரோக்கியமாகவும் மற்றும் நீளமாகவும் வளரும்.முடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்
குறிப்பு- 1
முதலில் 3 தேக்கரண்டி அரிசி எடுத்துக்கொண்டு அதனை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.
2 மணி நேரம் கழித்த பிறகு அரிசி ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் அந்த தண்ணீரை ஊற்றி அதனுடன் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் தயார் செய்து வைத்துள்ள இந்த Hair Spray-ஐ நன்றாக தலையில் அப்ளை செய்து 30 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 30 நிமிடம் கழித்த பிறகு வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள்.
இதனை நீங்கள் செய்வதன் மூலம் முடியின் ஆழம் வரை அரிசியில் உள்ள சத்துக்கள் முடியை ஆரோக்கியமாக வளர செய்யும்.
இதையும் படியுங்கள்⇒ பாலை முகத்தில் இப்படி அப்ளை செய்தால் இவ்வளவு அதிசயம் நடக்குமா.!
குறிப்பு- 2
இப்போது 1 கப் அரிசி எடுத்துக்கொண்டு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி சாதம் போல வேகா வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு சாப்பிடுவதற்கு போன்ற பதத்திற்கு சாதம் வந்தவுடன் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து தலையில் அப்ளை செய்து விட்டு 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
இதனை நீங்கள் முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி நன்றாக நீளமாக வளருவது கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க இந்த Home Rremedy ட்ரை பண்ணுங்க ..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |