இறந்த திதி பலன்கள் மற்றும் இறப்பு நட்சத்திர பலன்கள்

Advertisement

இறந்த திதி பலன் | Irantha Thithi Palangal

ஹாய் பிரண்ட்ஸ்.. வணக்கம் இன்றிய பதிவில் இறந்தவர்களின் திதி பலன்களை பற்றி பார்க்க போகிறோம். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். திதி என்பது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சரி முதலில் திதி என்றால் என்ன?, திதி ஏன் கொடுக்க வேண்டும் ?, திதியின் நண்மை தீமை என்ன? போன்ற தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

திதி என்றால் என்ன? நட்சத்திரம் எனறால் என்ன?

இறப்பு நட்சத்திர பலன்கள்

ஒரு மனிதன் பிறந்த தேர்த்தியை வைத்து அவர்களுக்கு ராசி நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. அது போல் ஒருவர் இறந்த நாளை திதி என்று கொண்டாடுகின்றோம். ஒருவர் நீண்ட ஆயிலோடு இருக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் அவர்களது நட்சத்திர நாளை பூஜித்து வர வேண்டும்.

அதேபோல் இறந்த ஒரு நபர் மோட்சத்தை அடைய வேண்டும் என்றால் அவர்களது திதியை கணக்கிட்டு பூஜை செய்து வந்தால் இறந்த ஆன்மா சாந்தி அடையுமாம். இதன் காரணமாக தான் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றன.

இறந்த ஆன்மா அவர்களது சந்ததியினர் திதி கொடுத்தால் தான் அவர்களது ஆத்மா சாந்தியடையுமாம். அவர்களது சந்ததியினர் இல்லாமல் வேறு யாராவது திதி கொடுத்தால். அந்த திதியை இறந்த ஆன்மா ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே இனியாவது இறந்தவர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

திதி கணக்கிடுவது எப்படி?

ஒருவர் இறந்த நாள், இறந்த மாதம், வருடம் இவற்றை கணக்கிட்டு, எந்த நேரத்தில் இறந்தார் என்பதையும் கணித்து. அந்த நேரத்தில் என்ன திதி நடந்துகொண்டிருந்தது அது வளர்பிறை திதியா அல்லது தேய்பிறை திதியா? என்பதை அறிந்துகொண்டு அந்த திதியினை இறந்தவரின் அடுத்த வருடம் அதே மாதத்தில், அதே திதியில் அதாவது வளர்பிறை திதி என்றால் வளர்பிறை திதியில், அல்லது தேய்பிறை திதி என்றால் தேய்பிறை திதியில் கணக்கிட்டு இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!

இறந்த நேரம் பலன்கள்:

ஒருவர் எந்த நேரத்திற்கு இறக்கிறாரோ அந்தநேரத்தை வைத்து ஜோதிடர்கள் கணிப்பார்கள். அதில் முக்கியமான பலன்களை பற்றி பார்ப்போம்.

அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இறந்தால், அவ்வளவு சீக்கிரம் மறுபிறவி இருக்காது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. நவமி மற்றும் ஏகாதசி போன்ற நாட்களில் இறந்தால், விரைவில் மோட்சம் அடைவார்கள் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

இறப்பு நட்சத்திர பலன்கள்:

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 இருக்கிறது. அவற்றை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

• நான்கு மாதங்கள் அடைப்பு உள்ள நட்சத்திரங்கள் ரோஹிணி

• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

• ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் கூறப்படுகிறது. அவை மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் போன்றவை ஆகும்.

தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு முறையான பரிகாரம் மேற்கொள்வது அவசியமானது.

ஒரு மனிதன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள்எந்த பிரச்சனையும் இல்லாமல் எமலோகம் செல்கிறார்கள். ஆனால்  தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது.

இதற்கு நாம் பரிகாரமாக செய்ய வேண்டியது, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இறந்த இடத்தில் திண்ணையில் மாலி நேரத்தில் வோளக்கேற்றி அதன் பக்கத்தில் தண்ணீர் வைத்து, நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். அதன் பொறகு கற்பூரம் காட்டி ஆரத்தி காட்டும் போது இறந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய கடவுளே வழி செய் என்று மனதில் நினைத்து கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜையை ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் செய்ய வேண்டியிருக்கும்.

இறந்த அடைப்பு என்றால் என்ன.?

கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள்.

எப்படி திதி கொடுக்க வேண்டும்?

பொதுவாக திதி கொடுக்க நினைப்பவர்கள் காலையில் பூஜையும், மதியம் 12 மணிக்குள் படையலிட்டு அவர்களது ஆன்மாவிற்கு சாந்தி செய்ய வேண்டும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement