நாய் ஊளையிட்டால் என்ன அர்த்தம்..! Dog Constantly Crying at Night..!
Dog Howling Reason in Tamil:- பொதுவாக நாய்கள் மனிதர்களுடன் மிகவும் பாசமாகவும், நன்றியுடனும் இருக்கும். இதன் காரணமாகவே அனைவரது வீட்டிலேயும் செல்ல பிராணியாக நாய்களை வளர்ப்பார்கள். இருப்பினும் சிலர் நள்ளிரவில் நாய் ஊளையிட்டால் அபசகுனம் அல்லது யாருக்காவது மரணம் ஏற்படும் என்று கூறுவார்கள். சரி இத்தகைய நாய்கள் நள்ளிரவில் ஊளையிட்டாலோ அல்லது அழுதால் நல்லதா? கெட்டதா? இதற்கு அறிவியல் கூறும் உண்மையான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க…
பல்லி விழும் பலன்..! |
நாய் ஊளையிடுவது ஏன் – Dog Howling Reason in Tamil:-
பொதுவாக அனைவருமே நள்ளிரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருப்போம் அந்த சமயம் திடீரென்று நாய்கள் ஊளையிடும் அல்லது அழுகும் இவ்வாறு நாய்கள் ஊளையிடும் பொழுது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள், இவ்வாறு நாய்கள் ஊளையிட்டால் அந்த ஊரில் உள்ளவர்கள் இறக்க போகிறார்கள் என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள். இதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்வோம் வாங்க..
இருப்பினும் நாய்கள் இரவு நேரங்களில் ஊளையிடுவது அல்லது அழுவது என்பது பொதுவான விஷயம் தான். நாய்கள் மனிதர்களிடம் மிகவும் பாசமாக பழகும் விலங்கினம் என்பதால் இரவு நேரங்களில் செல்லப் பிராணியான நாய் தான் தனியாக இருக்கும் பொழுது கவலைப்பட்டு அழுகிறது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள், மேலும் இவ்வாறு அழுவதால் நமது கவனத்தை ஈர்க்க செய்வதற்காக இப்படி அழுகின்றது என கூறுகிறார்கள்.
கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்..! |
இப்படி அழும்போது அதன் அருகில் நின்று நாம் பேச்சு கொடுத்தால் அது அமைதியாகிவிடும் என்று அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆன்மிக ரீதியாக தெரிந்து கொள்ளலாம்.
நாய் ஊளையிடுவது நல்லதா கெட்டதா:
நாய் ஊளையிட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வரப்போகிறது என்பதை குறிக்கிறது. அந்த வீட்டில் யாரேனும் உடல்நல குறைபாடு இருந்தால் அவர்கள் இறக்க நேரிடும் என்பது அர்த்தமாக இருக்கிறது. அதனால் நாய்கள் அழுத நாட்களில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இந்த சத்தம் ஆனது கெட்டதாக இருக்கிறது.
இதற்கு மஞ்சள் தூள் மற்றும் கடுகு, உப்பு மூன்றையும் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இதனை நாய் மீது தெளிக்க வேண்டும். இதன் மூலம் கெட்டதிலிருந்து விடுபடலாம்.
பகலில் நாய் ஊளையிட்டால் என்ன அர்த்தம்:
பகலில் நாய் ஊளையிடுவதற்கு பல காரணம் இருக்கலாம். எடுத்துக்காட்டாக இவற்றிற்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டால் ஊளையிடும். சில நேரங்களில் கவலையாக இருக்கும் போதும் சரி, தனிமையில் இருக்கும் போதும் சரி நாய் ஆனது ஊளையிட ஆரம்பிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |