2025- ஆண்டிற்குள் அதிர்ஷ்டம் கிடைக்க கூடிய ராசிகள்
பொதுவாக ஒவ்வொரு பெயர்ச்சியும் ஒவ்வொரு பலனை கொடுக்கும். ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும். கல்வியில் வெற்றி, ஞானம் மற்றும் ஞானத்தைப் பெறுதல் போன்றவற்றிற்கு குரு உதவுகிறார். வரும் மே மாதம் குரு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குரு பகவானை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயர்கிறார். இந்த குரு பெயர்ச்சியினால் எல்லா ராசிகளுக்கும் நன்மையை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் தான் பண மழையில் நினைய போகிறார்கள். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
ரிஷபம்:
குரு ரிஷப ராசிக்கு நுழைகிறார். இதனால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது. பணவரவு திருப்தியாக இருக்கும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். இருந்தாலும் செலவுகளும் இருக்க தான் செய்யும். நீங்கள் புதிதாக வேலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த காலம் உகந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
குரு பெயர்ச்சியினால் இந்த 5 ராசிகளுக்கு பணம் கொட்ட போகிறது பிடிக்க ரெடியா
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு வியாழன் பெயர்ச்சி ஆனது உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் சம்பள உயர்வும் கிடைக்கும். பணி சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். உங்களின் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு பணம் சம்மந்தமான எந்த விதமான பிரச்சனையும் இருக்காது.
சிம்மம்:
குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். தொழிலில் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் துணையிடம் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் அவை நீங்கும். நிதிநிலைமை ஆனது சிறப்பாக இருக்கும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 2025 வரை சிம்ம ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை என்பதே வராது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |