Sivanukku Piditha Rasi | சிவபெருமானுக்கு உகந்த ராசிகள்
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் (Sivanukku Piditha Rasi) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு ராசி பிடித்த/உகந்த ராசியாக இருக்கும். அப்படி இருக்கும் ராசிகளுக்கு அந்த கடவுளின் அருள் எப்போதும் இருக்கும். எந்தவொரு துன்பம் நேர்ந்தாலும், அந்த கடவுள் அதற்கு உகந்த ராசிகளை கைவிடாது. நம்மில் பலருக்கும் சிவபெருமான் இஷ்ட தெய்வமாக இருப்பார். ஆனால், சிவபெருமானுக்கே இஷ்ட ராசி என்று ஒரு 4 ராசிகள் உள்ளது அதனை பற்றித்தான் இந்த பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
கடவுள் நம்பிக்கை ஒரு சிலருக்கு இருக்கும், ஒரு சிலருக்கு இருக்காது. ஆனால் பெரும்பாலும் கடவுளை வணங்குவோம். பெரியவர்கள் குழந்தையை தத்து கொடு என்று சொல்வார்கள். அப்படி தத்து கொடுக்கும் போது அவர்களின் ராசியை வைத்து எந்த கடவுளுக்கு உகந்தவர்கள் என்று பார்த்து தத்து கொடுப்பார்கள். அது போல எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.
சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்:
மேஷம்:
மேஷம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடவுள் நம்பிக்கை உடையவர்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். மேஷம் ராசிக்காரர்கள் அவர்களால் ஒரு வேலையை செய்ய முடியாவிட்டாலும் மற்றவர்கள் அந்த வேலையால் பயன் அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். மேஷம் ராசியில் பிறந்தவரகளுக்கு எப்பொழுதுமே சிவபெருமானின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். அதே போல இவர்கள் சிவபெருமான் மற்றும் முருகன் கடவுள் மீது பக்தி உடையவர்களாக இருப்பார்கள். திங்கட்கிழமை அன்று உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்து சிவபெருமானின் அருளை பெற்று கொள்ளலாம்.
கடகம் ராசி:
கடக ராசி பார்வதி தேவிக்கு அம்சமான ராசி. சூரியன் சிவனை குறிக்கிறது, சந்திரன் பார்வதி தேவியை குறிக்கிறது. பார்வதி தேவியின் மாசம் பொருந்திய கடக ராசிக்காரர்களை சிவபெருமானுக்கு பிடித்த ராசியாக கருதப்படுகிறது. கடக ராசிக்காரர்கள் தாயின் மீது அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மீது இரக்கம் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
பிப்ரவரி 18 முதல் இந்த 3 ராசிக்கு அதிஷ்டம் தான்..! இதில் உங்கள் ராசி இருக்கா..?
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பி விடுவார்கள். மற்றவர்களுக்கு உதவி என்று கேட்டு வந்தால் இவர்களிடம் இல்லை என்றே சொல்ல மாட்டார்கள். இரக்கம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசியும் சிவனுக்கு உகந்த ராசியாக இருக்கிறது. உங்களால் முடியும் போது அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்ற பொருட்களை வாங்கி பசுவிற்கு கொடுக்கலாம்.
கும்பம்:
இவர்கள் எல்லாரையுமே நல்லவர்கள் என்று நம்பி விடுவார்கள். இவர்களையும் சிவபெருமானுக்கு பிடித்த ராசியாக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. இவர்களின் கூட இருப்பவர்களளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். திங்கட் கிழமைகளில் மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை கொடுப்பதால் உங்களது வாழ்வில் செல்வ செழிப்போடு இருக்கலாம்.
மேல் கூறப்பட்டுள்ள 4 ராசிக்காரர்களும் மற்றவர்களுக்கு தானம் கொடுப்பதால் மிகுந்த நன்மைகள் நடக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |