மற்றவர்களை பார்த்து பொறாமை படாத ராசிக்காரர்கள்
வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! இந்த ராசிக்காரர்கள் அழகாக இருப்பார்கள், மற்றும் அவர்களின் குணங்கள், ஆளுமை திறன், செல்வம் மிக்க ராசிக்காரர்கள் என்று பார்த்திருப்போம். இந்த பதிவினை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள். மற்றவர்களை பார்த்து இவர்கள் மாதிரி வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களை பார்த்து ஆசைப்படுவார்கள். ஆனால் ஆசை படலாம் மற்றவர்களை பார்த்து பொறாமை தான் பட கூடாது என்று சொல்வார்கள். அப்படி பொறாமை இல்லாத ராசிக்காரர்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலி இந்த ராசி பெண்கள் இவர்களை அடிச்சுக்க ஆளே கிடையாது..! இதில் நீங்கள் இருக்கீர்களா..
துலாம் ராசி:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் அக்கறையாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது தங்களின் மகிழ்ச்சியாக நினைப்பார்கள். இவர்கள் யாருடைய வாழ்க்கையையும் விளையாட்டாக நினைக்க மாட்டார்கள். இவர்கள் எந்த செயலையும் நேர்மையாக செய்வார்கள். எந்த சூழ்நிலையிலும் சமமாக இருப்பார்கள்.
கன்னி ராசி:
இவர்கள் எந்த சூழ்நிலையையும் பொறுமையாக கையாள்வார்கள். மற்றவர்களிடம் பேசும் போது அமைதியாக பேசுவார்கள். மற்றவர்களின் வளர்ச்சியை பார்த்து ஒரு போதும் பொறாமை கொள்ள மாட்டார்கள். மற்றவர்களின் மகிழ்ச்சியை பார்த்து இவர்களின் மகிழ்ச்சியாக பார்ப்பார்கள். உங்களின் உணர்வுகளையும், மகிழ்ச்சியையும் கன்னி ராசிகாரர்களிடம் பகிரலாம். இவர்கள் எப்போதும் நம்பிக்கைக்கு உரிமை உள்ளவர்கள். மற்றவர்கள் இப்படி தான் என்று கணிக்கமாட்டார்கள்.
மகரம் ராசி:
இந்த ராசிக்காரர்கள் பூமியின் அடையாளமாக இருப்பதால் மற்றவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ள மாட்டர்கள். எந்த செயலையும் முழு ஆர்வத்துடன் செய்வார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள சக பணியாளர்களிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதில் சந்தோசம் அடைவார்கள். இவர்களிடம் உள்ளதை வைத்து சந்தோசமாக வாழ கூடியவர்கள். கஷ்டமான செயலை கூட ஈசியாக செய்து முடிப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்கமாட்டர்கள்.
மேஷம் ராசி:
இந்த ராசியில் பிறந்தவர்கள் கவலை இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் கூட இருப்பவர்களை உன்னால் முடியும் என்று உற்சாக படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு செயலையும் கவனமாக செய்வார்கள். இவர்களின் மனது ரொம்ப சுத்தமாக இருக்கும். இவர்கள் ஒரு செயல் செய்தால் முழு கவனத்துடன் செய்து வெற்றிகரமாக முடித்துவிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் விருப்பம் இல்லாமல் எந்த செயலையும் செய்ய மாட்டார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |