Uthiram Natchathiram Thirumana Valkai
வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய ஆன்மீகம் பதிவில் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வலிமையானவர்களாக இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.
👉 சிம்ம ராசிக்காரர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா?
சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம்:
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாகவும், உண்மையாகவும் செய்யும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாளியாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்க்கு உதவும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மீகத்திலும் தெய்வ வழிபாட்டிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் இவர்களிடம் கோபம் அதிகம் ஒளிந்திருக்கும். கோபம் என்றால் என்ன என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு கோவக்காரர்களாக இருப்பார்கள்.
உத்திரம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை:
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களின் திருமணம் காதல் திருமணமாக இருக்கும்.
காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் திருமணம் செய்வதற்குள் ஒரு பெரிய போரே நடந்து விடும். இவருடைய காதலுக்கு எதிர்ப்புகள் அதிகம் இருக்கும்.
எதிர்ப்புகள் அதிகம் இருந்தாலும் காதலில் வெற்றி அடைவார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கை துணை அமைதியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மை பேசும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதால் இவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இவர்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கோப குணம் அதிகம் இருந்தாலும் வாழ்க்கை துணையிடம் அமைதியை மட்டும் கடைபிடிப்பார்கள்.
உத்திரம் நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பின் சிறப்பாக இருக்கும். இவர்கள் திருமணத்திற்கு பின் தன்னுடைய சொந்த முயற்சியால் வீடு, மனை, வண்டி, வாகனங்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வார்கள்.
இவர்கள் பிள்ளைகளால் மேலும் உயரும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிள்ளைகளால் நற்பெயர் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |