பனங்கற்கண்டு பயன்கள் | Panam Kalkandu Benefits in Tamil
வாழை மரம், தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் ஏராளமான உணவுப் பொருள்கள் போலவே பனை மரத்திலும் உணவுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந்த மரத்திலிருந்து சாப்பிடுவதற்கு பனங்கிழங்கு, நுங்கு, கள்ளு, பதனீர், பனைவெல்லம் போன்றவை கிடைக்கின்றன. இவற்றில் பனை வெல்லத்திலிருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு. கருப்பட்டி கெட்டியாக கருப்பு நிறத்தில் இருக்கும். பனங்கற்கண்டு படிகங்கள் போன்று இருக்கும் இனிப்பு பொருள். அவற்றில் ஒன்றான பனங்கற்கண்டு அதீத மருத்துவ குணம் வாய்ந்தது.
அத்தகைய சிறப்புமிக்க பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பனங்கற்கண்டில் உள்ள மருத்துவ பயன்கள் மற்றும் பனங்கற்கண்டினை பயன்படுத்தும் முறையினை பற்றியும் இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.
பனங்கற்கண்டு நன்மைகள் – இருமலை குணப்படுத்த:
- பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்குவதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் சளித்தொல்லை, இருமல், தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
வாய் துர்நாற்றம் நீங்க – பனங்கற்கண்டு பயன்கள்:
- வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மெல்வதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
- மாமிச உணவுகள் அல்லது எந்த உணவாக இருந்தாலும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீரால் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தவிர்க்க முடியும்.
Panam Kalkandu Benefits in Tamil – ஆற்றல் அதிகரிக்க:
- 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் அசதி நீங்கும். உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
தொண்டை வலியை சரி செய்ய:
- பனிக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டி கொள்வதை சரி செய்வதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டுடன், அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், அரை டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு மற்றும் தொண்டை வலி சரியாகும்.
மூளை வளர்ச்சி மேம்பட – பனை வெல்லம் பயன்கள்:
- பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் அனைத்தையும் சேர்த்து இரவில் சாப்பிட்டவுடன் உறங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
- குழந்தைகளுக்கு இதை கொடுப்பதன் மூலம் மூளை வளர்ச்சி மேம்படவும், ஞாபக திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
ஜாதிக்காய் மருத்துவ பயன்கள் |
கண் பார்வை அதிகரிக்க – Palm Sugar Benefits in Tamil:
- கண் பார்வை மங்கலாக உள்ளவர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு பனங்கற்கண்டு, பாதாம் மற்றும் சீரகம் சாப்பிட கொடுப்பதன் மூலம் கண் பார்வை திறன் அதிகரிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் பனங்கற்கண்டு, மிளகு தூள் மற்றும் பாதாமுடன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
கிட்னி கல் வளராமல் தடுக்க – பனங்கற்கண்டு நன்மைகள்:
- ஆக்சாலிக் அமிலம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உருவாகும் கிட்னி கல்லை கரைப்பதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதன் மூலம் கிட்னி கல் வளர்ச்சியை தடுக்கலாம்.
பனங்கற்கண்டு பயன்கள் – கர்ப்பிணி பெண்கள்:
- கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்று புண் ஆகியவற்றை குணப்படுத்தவும், உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுகிறது.
உடல் சூட்டை தணிக்க – பனை வெல்லம் நன்மைகள்:
- உடல் சூட்டை தணிப்பதற்கு பனங்கற்கண்டு பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டால் ஏற்படும் நீர் சுருக்கு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம், கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.
பற்களை வலுப்படுத்த
- காய்ச்சல், டைபாய்டு மற்றும் நுரையீரலில் ஏற்படும் நீர்க்கட்டு போன்றவற்றை சரி செய்வதில் பனங்கற்கண்டு முக்கிய பங்காற்றுகிறது.
- இதய நோய் குணமாகவும், இதயத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதில் இருக்கும் கால்சியம் பல், ஈறுகளை வலுப்படுத்தவும், வைட்டமின் சி குறைவால் பல்லில் ஏற்படும் ரத்த கசிவை குணப்படுத்தவும் உதவுகிறது.
எப்படி எடுத்து கொள்ளலாம்:
பனங்கற்கண்டை பசும்பாலுடன் சிறிது ஏலக்காய் சேர்த்து குடித்தால் வயிற்று புண்ணை சரி செய்யக்கூடும். வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் அவற்றை கூட சரி செய்யும்.ஆண்கள் இந்த பாலை குடித்து வந்தால் விந்தணுக்கள் அதிகமாகும்.
உங்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கிறது என்றால் பனங்கற்கண்டை சீரகத்தை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் நீங்கும். மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டுடன், பாதாம் பருப்பு, சீரகம் சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பனங்கற்கண்டை 1 தேக்கரண்டி வெங்காய சாறுடன் சேர்த்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
பனங்கற்கண்டு தீமைகள்:
- இதில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதனை எடுத்து கொள்வதன் மூலம் உடல் எடையானது அதிகரிக்க கூடும்.
- இதில் அதிகம் அளவு சர்க்கரை நிறைந்திருப்பதால் இதனை அதிகமாக எடுத்து கொள்வதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் இதய பிரச்சனைகளையும் ஏற்படுத்த கூடும்.
- செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |