புதிர் விடுகதை வினா விடைகள் | Puthir Vidukathai in Tamil
வணக்கம்.. பொதுவாக விடுகதை என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். விடுகதை என்றால் போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி கேள்வியை கேட்பார்கள் அல்லது அந்த கோர்க்கான பதிலை சொல்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் உங்களுக்க சில புதிர் விடுகதை வினா விடைகளை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.
புதிர் விடுகதை வினா விடைகளை படிக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே, இதனை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு படித்த்து மகிழுங்கள்.
புதிர் விடுகதை வினா விடைகள்:
1.நான் இளமையாக இருக்கும்போது உயரமாக இருக்கிறேன், வயதாகும்போது குட்டையாக இருக்கிறேன் நான் யார்.?
விடை : மெழுகுவர்த்தி
2. சிவப்பு என்றால் போகலாம் பச்சை என்றால் நிற்கலாம்.?
விடை: தர்ப்பூசணி
3. நான் ஒரு கிரகம், ஒரு கடவுள், வெப்பத்தை அளவிடுகிறேன்.. நான் யார்.?
விடை: Mercury
4. என்னை எப்போததும் தூக்கி எரிய முடியாது. ஆனால், தூக்கி எரிய முடியும்.. நான் யார்.?
விடை: சளி
5. எனக்கு பல கிளைகள் உண்டு. ஆனால், பழம், தண்டு, இலை இல்லை. நான் யார்.?
விடை: வங்கி
Puthir Vidukathai in Tamil:
1.வந்தால் கொண்டாட்டம் வராவிட்டால் திண்டாட்டம் அது என்ன?
விடை: மழை
2. கை இருக்கு பிடிக்க முடியாது, கால் இருக்கு நடக்க முடியாது அது என்ன?
விடை: நாற்காலி
3. இரவல் கிடைக்காதது இரவில் கிடைக்கும் அது என்ன?
விடை: தூக்கம்
4. கடல் இருக்கும் நதி இருக்கும் தண்ணீர் இருக்காது – நாடு இருக்கும் ஊரும் இருக்கும் வீடு இருக்காது அது என்ன?
விடை: உலக வரைப்படம்
5. வாரி வாரி வழங்குவான் வெளிச்சம் அதை வாங்கத்தான் ஆளில்லை அவன் யார்?
விடை: மின்னல்
6. மரத்துக்கு மரம் தாவும் குரங்கு அல்ல பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார்?
விடை: அணில்
7. மழையில் பூக்கும் பூ அது என்ன?
விடை: குடை
8. பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன் யார்?
விடை: நாய்
9. நீண்ட உடம்புக்காரன் நெடுந்தூரப் பயணக்காரன் அவன் யார்?
விடை: தொடர்வண்டி
10. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?
விடை: விடை: எறும்பு
11.காற்றாடி பறப்பது எப்படி?
கல்வி வளர்வது எப்படி?
விடை: நூலால்
12. இவன் ஒரு பேப்பர் தான் ஆனால் மதிப்போடு இருப்பான்
விடை: பணம்.
13. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?
விடை: இதயம்
14. திங்க பழம் காய்க்கும், திங்காத காய் காய்க்கும்.
விடை: வேப்ப மரம்
வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது
விடை: விமானம்
கடின விடுகதைகள் | புதிர் விடுகதைகள் with answer
ஒருவனுக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அத்தனையும் சகோதரிகள் உள்ளனர். ஆனால் அதே குடும்பத்தில் ஒரு சகோதரிக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அதில் பாதி எண்ணிக்கையில் தான் சகோதரிகள் உள்ளனர்.
அப்படியானால் அவர்களில் சகோதரர்கள் எத்தனை பேர்? சகோதரிகள் எத்தனை பேர்?
விடை: மொத்தம் ஏழு பேர் நான்கு சகோதரர்கள் மூன்று சகோதரிகள்.
ஒரு ஊரில் ஒருவனுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் ஒரு தங்கை இருக்கின்றாள். அப்படியானால் அவனுக்கு மிகக் குறைவாக எத்தனை குழந்தைகள் இருக்க முடியும்?
விடை: மொத்தம் ஐந்து குழந்தைகள். முதல் நான்கு மகன்கள், ஐந்தாவது மகள். அவள் நால்வருக்கும் தங்கை ஆகிறாள்.
தெற்கு வடக்காக கட்டப்பட்ட ஆறடி உயரம் உள்ள சுவரின் மீது ஒரு சேவல் அமர்ந்து உள்ளது அதன் தலை கிழக்கு நோக்கியும் பின் பகுதி மேற்கு நோக்கியும் உள்ளது அது இடும் முட்டை எந்த பக்கம் விழும்?
விடை: இவன் ஒரு பேப்பர் தான் ஆனால் மதிப்போடு இருப்பான்சேவல் முட்டை விடாது
மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் |
விடுகதைகள் | Vidukathaigal |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
விடுகதை விளையாட்டு விடைகள் |
கணக்கு விடுகதைகள் |
தமிழ் விடுகதைகள் 400 With Answer |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |