திருக்குறள் அதிகாரம் ஒழுக்கமுடைமை | Olukkam Udaimai Adhikaram Thirukkural

Olukkam Udaimai Adhikaram Thirukkural

ஒழுக்கமுடைமை திருக்குறள் விளக்கம் | Thirukkural Olukkam Adhikaram in Tamil

ஒழுக்கம் என்பது மனிதன் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாகும். பிறருக்கு ஒழுக்கத்தை நாம் சொல்லிக்கொடுப்பதை விட தன்னிடம் எந்த அளவிற்கு ஒழுக்கமானது நிறைந்துள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை பற்றி குறள் மூலம் மனிதர்களுக்கு மிக சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். திருவள்ளுவர் இயற்றிய ஒவ்வொரு அதிகாரமும் மனித வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக்கூடிய விஷயமாக இருக்கிறது. சரி வாங்க இந்த பதிவில் ஒழுக்கமுடைமை திருக்குறள் அதிகாரத்தை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

திருக்குறள் 4 அதிகாரம்

குறள் 131:

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

குறள் விளக்கம்:

ஒரு மனிதருக்கு ஒழுக்கம் என்பது எப்போதும் மேன்மையை தரக்கூடிய ஒன்று. அந்த ஒழுக்கம் தான் உயிரினும் மேலாக சான்றோரால் காக்கப்படுகிறது.

குறள் 132:

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

குறள் விளக்கம்:

வருந்தியேனும் ஒழுக்கத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். பலவற்றை ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும் ஒழுக்கம் மட்டுமே உயிருக்கு துணையாக நிற்கும்.

குறள் 133:

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

குறள் விளக்கம்:

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடி பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகிவிடும்.

குறள் 134:

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

குறள் விளக்கம்:

கற்றதை மறந்ததும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் பிறப்பால் வந்த உயர்வு அவன் ஒழுக்கம் குன்றினால் அனைத்தும் கெடும்.

குறள் 135:

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

குறள் விளக்கம்:

பொறாமை குணம் இருப்பவர்களிடம் ஆக்கம் இல்லாதது போன்று ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையில் உயர்வும் இருக்காது.

திருக்குறள் அதிகாரம் 9

குறள் 136:

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.

குறள் விளக்கம்:

மனதில் அதிக வலிமை உடையவர் ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து ஒழுக்கத்திலிருந்து எப்போதும் பிறழ மாட்டார்கள்.

குறள் 137:

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

குறள் விளக்கம்:

ஒழுக்க குணத்தால் எல்லோரும் மேன்மையை அடைவார்கள். ஆனால் ஒழுக்கத்தினை தவறினால் அடையக்கூடாது பெரும் பழியினை அடைவார்கள்.

குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

குறள் விளக்கம்:

நல்ல ஒழுக்கமானது இன்பமான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். தீய ஒழுக்கமானது எந்த காலத்திற்கும் துன்பத்தை மட்டுமே தரும்.

குறள் 139:

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

குறள் விளக்கம்:

கெட்ட சொற்களை தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம் நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும்.

குறள் 140:

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலர் தார்.

குறள் விளக்கம்:

உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர் பல நூல்களை கற்று இருந்தாலும் அறிவில்லாதவர் போன்றுதான் இருப்பார்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil