ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? | What is Share Market in Tamil

Advertisement

பங்கு சந்தை ஆலோசனை

What is Share Market in Tamil:- வணக்கம் நண்பர்களே.. இந்த பதிவில் நாம் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஷேர் மார்க்கெட் என்பது மிக பெரிய கடல் என்று தான் சொல்ல வேண்டும். இவற்றில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. ஆகவே ஷேர் மார்க்கெட் பற்றி எங்களுக்கு தெரிந்த அடிப்படை விஷயங்களை பற்றி பதிவு செய்துள்ளோம். பொதுவாக நாம் தொழில் தொடங்க முதலில் நமக்கு அடிப்படையான விஷயங்கள் தெரிந்திருந்தாலே போதும். அதன் பிறகு நம்மை நாமே வளர்த்து கொள்ள முடியும். சரி வாங்க பங்குசந்தை என்றால் என்ன என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம்.

பங்குசந்தை என்றால் என்ன? | What is Share Market in Tamil

உதாரணம்: 

நான் ஒரு A to Z என்ற ஒரு கம்பெனியை ஆரம்பிக்க நினைக்கிறேன். இந்த கம்பெனி ஆரம்பிக்க எனக்கு 10 லட்சம் தேவைப்படுகிறது, இருப்பினும் என்னிடம் சொந்தமாக  5 லட்சம் மட்டுமே இருக்கிறது. மேலும் 5 லட்சம் பணத்திற்கு எப்படியெல்லாம் பணம் திரட்டலாம் என்று யோசிக்கிறேன். எனக்கு மூன்று வழிகள் கிடைகின்றன.

முதல் வழி வங்கிகளில் கடன் வாங்குவது.

இரண்டாவது வழி எனது நண்பனிடம் 5 லட்சம் பணம் வாங்கி இருவருமே இணைந்து கம்பெனியை ஆரம்பிப்பது. இருப்பினும் இந்த A to Z கம்பெனிக்கு நான் மற்றும் எனது நண்பர் இருவருமே ஓனராக இருப்போம். இந்த A to Z கம்பெனியில் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டிலும் எங்கள் இருவருக்கும் 50% பங்கு இருக்கும்.

மூன்றாவது வழி என்னவென்றால் அது தான் ஷேர் மார்க்கெட் என்னிடம் 5 லட்சம் பணம் இருக்கிறது. இன்னும் எனக்கு 5 லட்சம் பணம் தேவைப்படுகிறது. எனது A to Z கம்பெனியில் ஒரு ஷேர் ரூபாய் 100 என்று விற்பனை செய்கின்றேன். எனக்கு தேவைப்படும் 5 லட்சத்திற்கு நான் 5,000 ஷேரினை கொண்டு வந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். ஆகவே எனது அனைத்து ஷேரினையும் விற்பனை செய்துவிட்டேன் என்றால் எனக்கு தேவைப்படும் 5,000 X 100 = 5,00,000/- (5 லட்சம்) கிடைத்துவிடும். இந்த பணத்தை கொண்டு எனது A to Z கம்பெனியை ஆரம்பித்து விடுவேன். எனது கம்பெனியில் லாபம் வந்ததுன்னா எனது 50% லாபத்தை எடுத்து கொண்டு, மீதமுள்ள 50% லாபத்தினை என்னிடம் ஷேர் வாங்கின அனைவருக்கும் பிரித்து கொடுப்பேன்.

பங்கு சந்தை குறிப்புகள்:

  1. பங்கு சந்தை என்பது ஒரு மிகப்பெரிய விற்பவர்களும் வாங்குபவர்களும் கூடும் ஒரு ஏல சந்தை ஆகும். இங்கு பல நிறுவனங்களின் பங்குகள் விற்கவும் வாங்கவும் ஏலம் நடைபெறும்.
  2. ஒரு நிறுவனத்தை மேலும் பெரிய நிறுவனமாக மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு அதிக பணம் தேவைப்படும். அப்பொழுது அவர்கள் மக்களின் உதவியை நாடுவர். அவர்கள் எவ்வளவு பணம் தேவையோ அவற்றை பல பகுதிகளாக பிரித்து அவற்றை விற்பர் இதனை பங்கு என்று சொல்வார்கள். இத்தகைய செயற்பாடுகளை செய்வதற்கு ஐபிஓ (IPO – Initial Public Offering) என்று பெயர்.
  3. இப்பொழுது அந்த பங்குகளை வாங்கும் ஒவ்வொருவரும் அந்நிறுவனம் பெறும் லாப நஷ்டத்திலும் பங்கு பெறுவர்.
  4. பங்குச்சந்தை முரண்பாடுகளை கண்காணிக்க இந்திய அரசு செபி (Securities and Exchange Board of India (SEBI)) என்ற அமைப்பு ஒன்று உள்ளது.
  5. இந்தியாவில் இந்த ஏல சந்தையை நடத்துவதற்கு என்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE- National Stock Exchange, BSE -Bombay Stock Exchange) உள்ளது.

Stock Exchange என்றால் என்ன?

  1. NSE-யில் 1700 க்கு மேற்பட்ட கம்பெனிகள் பதிவு செய்துள்ளனர். அதேபோல் BSE-யில் 5400 க்கு மேற்பட்ட கம்பெனிகள் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு Exchange-யிலும் index என்ற விஷயங்கள் இருக்கின்றன.
  2. NSE-ஐ நிப்டி என்று சொல்வார்கள் அதாவது (Nifty – National fifty) என்று  சொல்வார்கள். அதேபோல் BSE-ஐ சென்செக்ஸ் என்று சொல்வார்கள், சென்செக்ஸ் என்பது (Sensex- sensitive index) என்று சொல்வார்கள். இவை இரண்டும் என்ன அப்படினா புத்தகத்தின் முதல் பக்கத்தில் குறியீடு (Index) என்று இருக்கும் அல்லவா சிறப்பு தொகுப்பு என்று, அதை போன்றுதான் இந்த Index-ம் இருக்கும்.
  3. NSE & BSE ஆகிய இரண்டு நிறுவங்களும் எப்படி நடைபெறுகிறது என்று நாம் ஒவ்வொன்றாக பார்க்க முடியுமா? முடியாது அல்லவா.. இதன் காரணமாகவே இந்த NSE & BSE Exchange இரண்டு பிரிவுகளில் உயர்தரத்தில் உள்ள நிறுவனங்களை கொண்டு லாபம் & நஷ்டங்களை தெரிந்து கொள்கின்றன.
  4. NSE அதாவது நிப்டி என்பதில் 50 நிறுவனங்களின் குறியீடு ஆகும். அதேபோல BSE சென்செக்ஸில் என்பது உயர்ந்த 30 நிறுவனங்களின் குறியீடு ஆகும். இவை இரண்டும் இந்தியாவின் பொருளாதாரத்தை கொண்டு நிப்டி மற்றும் சென்செக்ஸில் கம்பெனிகளில் உள்ள ஷேர்ஸ் அதிகரிக்கும் அல்லது குறையும்.

ஷேர்ஷை Stock Exchange-யில் எப்படி List Out செய்வது?

பங்குச்சந்தையில் செபியின் பணிகள்: தொடக்கத்தில் கூறியது போல் என்னோட A to Z என்ற கம்பெனிக்கு தேவைப்படும் 5 லட்சம் பணத்திற்கு எவ்வளவு சேர் விற்றால் எனக்கு அந்த 5 லட்சம் கிடைக்கும் என ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தேன் அல்லவா… ஆனால் இந்த ஷேரையும் அவ்வளவு எளிதாக என்னால் விற்பனை செய்து விட முடியாது. எனது ஷேரை விற்பனை செய்வதற்கு முதலில் நான் Stock Exchange-யில் List Out செய்ய வேண்டும். ஏன் Stock Exchange-யில் List Out செய்ய வேண்டும் என்றால் எனது கம்பெனி இது வரை பிரைவேட் கம்பெனியாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் எனது கம்பெனியை பப்ளிக் கம்பெனியாக மாற்றும் போதுதான் எனது ஷேர் கன்வெட் ஆகி மக்களிடம் போய் சேரும். அதற்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன அது கொஞ்சம் கடினமானதாகவும் இருக்கும்.

எனது A to Z கம்பெனியை NSE அல்லது BSE-யில் பதிவு செய்ய வேண்டும் என்றால் முதலில் நான் SEBI என்பவர்களிடம் அனுமதி வாங்க வேண்டும். SEBI என்பவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே எனது கம்பெனி NSE அல்லது BSE நிறுவனங்களில் பட்டியலிடப்படும்.

ஷேர் எப்படி மதிப்பிடப்படுகிறது?

ஒரு ஷேரின் விலை 100 ரூபாய் என்று வைத்து கொள்வோம், இந்த 100 ரூபாய் எப்படி மதிப்பிடப்படுகிறது என்று பார்ப்போம். எனது கம்பெனியை பப்ளிக் கம்பெனியாக மாற்றிய பிறகு NSE அல்லது BSE இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் செல்லும் போது, அவர்கள் உங்கள் கம்பெனியின் மதிப்பை பொறுத்து உங்கள் ஷேருக்கான மதிப்பை கொடுப்பார்கள். இவ்வாறுதான் நீங்கள் விற்கும் அல்லது வாங்கும் ஷேர்ஸ்க்கு மதிப்பிடப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் தகவல்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement