வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்..!

Updated On: November 23, 2022 1:39 PM
Follow Us:
How To Grow Curry Plant Fast From in Tamil
---Advertisement---
Advertisement

How To Grow Curry Plant Fast From in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். கருவேப்பிலை வைத்து சமைக்காத உணவுகளே கிடையாது. அந்த காலத்தில் ஒரு பிள்ளை இருக்கும் வீட்டில் கருவேப்பிலை மரம் வளர்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.

இன்றைய காலகட்டத்தில் நாம் கருவேப்பிலையை கடையில் காசு கொடுத்து வாங்குகிறோம். சிலர் கருவேப்பிலை செடி வீட்டில் வைத்து வளர்த்தோம். ஆனால் அது வளரவே இல்லை என்று புலம்புவார்கள். அப்படி புலம்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் கருவேப்பிலை செடி எப்படி வளர்ப்பது என்பதை தெரிந்து கொள்வோம்..!

முருங்கை மரத்தில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?

கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி..? 

How To Grow Curry Plant Fast From in Tamil

கருவேப்பிலை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தாவரமாகும். இதை வெப்ப மண்டல தாவரம் என்று கூறலாம்.

கருவேப்பிலை வெப்ப மண்டல தாவரம் என்பதால் இதை நீர் வடிய கூடிய மண்ணில் பயிரிடலாம். அதேபோல செம்மண்ணில் கருவேப்பிலை நன்றாக வளரும்.

அதுபோல இதை விதைகளாகவும் அல்லது செடிகளாகவும் பயிரிடலாம்.  இதை விதைப்பதற்கு முன் குழியில் எரு மற்றும் மக்கிய உரம் இவற்றை கலந்து போட வேண்டும்.பின் அதன் மேல் கருவேப்பிலை செடியையோ அல்லது விதையையோ விதைக்க வேண்டும்.   

இப்படி செய்வதால் கருவேப்பிலை விரைவாக துளிர் விடும். அதுபோல தினமும் கருவேப்பிலை செடியில் காய்கறி கழிவுகளை போடலாம். இது நல்ல உரமாக செடி வளர்வதற்கு உதவும்.

செடி நன்றாக வளர்வதற்கு காலை மாலை என 2 வேலையும் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

கருவேப்பிலை நன்மைகள்

கருவேப்பிலை செடி வேகமாக வளர: 

  1. கருவேப்பிலை செடி ஓரளவு வளர்ந்த பின் 15 நாட்களுக்கு ஒருமுறை உரம் போடுவது நல்லது.
  2. கருவேப்பிலை செடி வேகமாக வளர்வதற்கு மண்புழு உரத்தை போடலாம். அதுபோல செடிக்கு மக்கும் உரத்தையும் போடலாம்.
  3. இந்த உரத்தை போடும் போது செடியின் மேல் இருக்கும் மண்ணை கிளறி விட்டு உரத்தை வைக்க வேண்டும். பிறகு மறுபடியும் மண்ணை கிளறி விட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  4. நாம் தூக்கி எரியும் வெங்காயத் தோலை இந்த செடிக்கு உரமாக பயன்படுத்தலாம்.
  5. வேப்பங்கொட்டை புண்ணாக்கை தண்ணீரில் கலந்து வாரத்திற்கு 2 முறை செடிக்கு தெளிக்கலாம்.
  6. சாம்பல் அல்லது கரித்துண்டு இவற்றை தூளாக செய்து செடியின் ஓரங்களில் உரமாக போடலாம்.
  7. கருவேப்பிலை செடியை தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் வளர்க்க கூடாது.

இதுபோல செய்து வந்தால் கருவேப்பிலை செடி வேகமாக வளரும். இலைகளும் நன்கு செழிப்பாக இருக்கும்.

கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிந்துகொள்ளுங்கள்

 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

வெள்ளரிக்காய் சாகுபடி

குளிர்ச்சியை தரும் வெள்ளரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

How To Protect Plants From Heat in Tamil

வெயில் காலத்தில் மாடித்தோட்டத்தை பராமரிக்கும் முறை..!

Kaththirikkai Sedi Athigam Kaikka Tips in Tamil

கத்திரிக்காய் செடி தாறுமாறாக காய்கள் காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்..!

how to plant hibiscus from seeds in tamil

விதை மூலம் செம்பருத்தி செடி வளர்ப்பது எப்படி

Tulsi Plant Fertilizer Homemade in Tamil

இந்த உரத்தை போட்டால் காய்ந்த துளசி செடி கூட ஒரே வாரத்தில் தளதளவென்று செழித்து வளரும்.!

அரிசி சாகுபடியை தவிர மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்..!

பீர்க்கங்காய் சாகுபடி

இயற்கை விவசாயம் பீர்க்கங்காய் சாகுபடி..!

உரம் வகைகள்

உரம் பெயர்கள்,உரம் வகைகள், உரம் பயன்கள்..! | Uram in Tamil

how to grow tulsi plant at home in tamil

ஆன்மிக மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த துளசி செடி செழிப்பாக வளர வேண்டுமா ..அப்போ இந்த 3 Tips follow பண்ணுக…