Sambrani Thoobam Benefits in Tamil
பொதுவாக அனைவரின் வீட்டிலேயும் சாம்பிராணி காட்டுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. மாலை நேரத்தில் சாம்பிராணி வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்த சாம்பிராணி தூபம் காட்டுவதால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதில் ஐஸ்வர்யங்கள் கிடைப்பதற்கு என்ன மாதிரியான சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வெள்ளி, செவ்வாய் சாம்பிராணி தூபம்:
வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுவதால் நம் வீட்டில் தீமைகள் நீங்கி, நல்லவை கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இதுவரை நம்மிடம் இருந்த கஷ்டங்கள் நீங்கும். தேவையற்ற செலவுகள் நீங்கி வருமானம் நிலைத்திருக்கும்.
கெமிக்கல் கலந்த சாம்பிராணி தூபம் போடாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சாம்பிராணி தூபத்தை காட்டுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும், மேலும் வீட்டில் நல்ல மனம் இருந்து கொண்டே இருக்கும்.
இனி காய்ந்த பூக்களை தூக்கி போடாதீங்க வீட்லயே சாம்பிராணி செய்திடலாம் ஈஸியா
சாம்பிராணியில் கலந்து போட வேண்டியவை:
- தூய்மையான சாம்பிராணியில் தூபம் காட்டினால் திருஷ்டி, பொறாமை போன்றவை நீங்கும்.
- சாம்பிராணியோடு அகில் போட்டு தூபம் காட்டினால் குழந்தை பேறு கிடைக்கும்.
- சாம்பிராணியில் தூதுவலையை போட்டு தூபமிட்டால் வீட்டில் தெய்வ சக்தி இருந்து கொண்டே இருக்கும்.
- சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் விலகி விடும். சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டுத் தூபமிட்டால் நீங்கள் எந்த காரியத்தை செய்கிறீர்களோ அவை கைகூடி வரும். சாம்பிராணியில் வேப்பிலையை போட்டுத் தூபமிட உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நோய்கள் இருந்தால் அவை நீங்கி விடும்.
- சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டுத் தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும். சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டுத் தூபம் காட்டினால் மலலட்சுமியின் அருள் கிடைக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |