Selvam Peruga Manthiram
வீட்டில் கஷ்டம் என்பது அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடிய ஒன்று. ஆனால் இத்தகைய கஷ்டத்தினை அப்படியே விட்டு விடாமல் அதற்கான முயற்சி முடிவினை நாம் தேட வேண்டும். இந்த வகையில் பார்க்கும் போது ஆன்மீகத்தில் அனைத்து விதமான செயல்களுக்கு எண்ணற்ற பரிகாரம் மற்றும் மந்திரங்கள் என காணப்படுகிறது. இதுபோன்ற பரிகாரங்களை நாம் செய்யும் முயற்சியுடன் சேர்த்து செய்யும் போது வெற்றி அளிக்கும் விதமாக இருக்கும் என்று ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இன்று வீட்டில் செல்வம் பெறுக கல் உப்பினை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டில் செல்வம் செழிக்க:
வீட்டில் இதுநாள் வரையிலும் காணப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வம் செழிக்க கல் உப்பினை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை தான் செய்யப்போகிறோம்.
இந்த பரிகாரத்தை நீங்கள் 48 நாட்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். மேலும் குளித்து முடித்த பிறகு தான் இதை பரிகாரத்தை செய்ய வேண்டும்.
- கல் உப்பு
- பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டில்
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் இந்த கல் உப்பு பரிகாரத்தை செய்வதற்கு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ள எல்லா கஷ்டங்களும் நீங்குவதற்கு தேங்காய் மட்டும் போதும்..
செல்வம் பெருக மந்திரம்:
முதலில் உங்களுடைய வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டு விடுங்கள். அதன் பிறகு தரையில் ஒரு விரிப்பினை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள்.
இப்போது கையில் கல் உப்பினை இடது உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு கீழே விழாதவாறு வைத்து கையினை மூடி கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று குபேரர் மற்றும் மஹாலஷ்மியை மனதில் நினைத்து கொண்டு ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நம என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த மந்திரத்தை வடக்கு திசை அல்லது வட கிழக்கு திசையில் தான் செய்ய வேண்டும்.
பின்பு இந்த மந்திரத்தை கூறி பிறகு கையில் உள்ள கல் உப்பினை பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் வைத்து மூடி வைத்து விடுங்கள். இதே போல் 48 நாட்களும் மந்திரத்தை கூறி முடித்த பிறகு பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு வைய்யுங்கள்.
மேலும் 48 நாட்கள் முடிந்த பிறகு இந்த கல் உப்பினை நீரில் கரைத்து விடுங்கள்.
மந்திரம் கூற வேண்டிய நேரம்:
கல் உப்பை பயன்படுத்தி கூறும் இந்த மந்திரத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை அல்லது மாலை 6 மணி முதல் 9 மணி வரை என எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
மேலும் இந்த மந்திரத்தை வளர்பிறை பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமையில் தான் முதலில் செய்ய தொடங்க வேண்டும்.
இந்த கல் உப்பு மந்திரத்தை செய்து கொண்டே வீட்டில் செல்வம் செழிக்க செய்ய வேண்டிய முயற்சியினையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்.. தீராத கடனும் தீர்ந்து விடும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |