How to Use Amla Powder For Hair Growth
முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக கடையில் விற்கும் எண்ணெய் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துவீர்கள். நீங்கள் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை வைத்து முடியின் வளர்ச்சியை எப்படி அதிகப்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
நெல்லிக்காய் முடிக்கு எப்படி பயன்படுகிறது:
வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. இது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் மற்றும் இயற்கையான கண்டிஷனராகும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சிறந்த முடிவுகளுக்கு, 100% இயற்கையான மற்றும் தூய ஆம்லா கொண்ட தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெல்லிக்காயை நீங்கள் பொடியாகவும் பயன்படுத்தலாம் எண்ணையாகவும் பயன்படுத்தலாம். வாங்க ஒவ்வொன்றாக பார்க்கலாம்.நெல்லிக்காய் பொடி ஹேர் பேக்:
நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறியதாக கட் செய்து வெயிலில் காய வைத்து கொள்ளவும். காய்ந்ததும் பொடியாக அரைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
இந்த நெல்லிக்காய் பொடியிலுருந்து உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து சிறிதளவு தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும்.
தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் பாத வெடிப்பை சரி செய்யலாம்
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆம்லா எண்ணெய்:
அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். எண்ணெய் சூடு வந்ததும் நெல்லிக்காய் பொடி 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும். ஆம்லா பொடி எண்ணெயில் சேர்ந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
பிறகு இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய் மற்றும் முட்டை:
ஒரு கிண்ணத்தில் 1 முட்டையை ஊற்றி கலந்து கொள்ளவும். அதனுடன் நெல்லிக்காய் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |