கருணாநிதி சாதனைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கலைஞர் கருணாநிதி சாதனைகள் கட்டுரை பற்றி பார்க்கலாம் வாங்க. கலைஞர் கருணாநிதி அவர்களை பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கருணாநிதி செய்த சாதனைகள் பெரிது. மக்களுக்காக பல சாதனைகள் செய்துள்ளார். அதனை பற்றி இப்பதிவில் கட்டுரை வடிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கலைஞர் கருணாநிதி சாதனைகள் கட்டுரை:
முன்னுரை:
முத்துவேல் கருணாநிதி என்ற எழுத்துக்கள் வெறும் பெயர் மட்டுமல்ல, அது ஒரு அடையாளம். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர். தன்னுடைய அரசியல் எதிரிகள் கூட தன்னை விரும்பும் வண்ணம் மொழியாலும், ஆளுமை திறனாலும் புலமை படைத்தவர் கலைஞர் கருணாநிதி. இவர் படைத்த சாதனைகள் ஏராளம். அதனை பற்றி பார்க்கலாம்.
கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு
கலைஞர் கருணாநிதி செய்த சாதனைகள்:
- மிகச்சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆகமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர், கலைஞர் அவர்கள்.
- இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவக் காப்பீடு திட்டத்தை கொண்டுவந்தவர்.
- தகவல் பாகுபாட்டை உடைப்பதற்காக, இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தை கொண்டுவந்தவர்.
- தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை உருவாக்கி, பேருந்துகளை நாட்டுடைமையாக்கியவர், கலைஞர்.
- சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களும் தேசியக்கொடியை ஏற்ற வழிவகை செய்தவர், கலைஞர்.
- இந்தியாவில் முதன்முதலாக ‘மாநில சுயாட்சி’ குழுவை, தமிழ்நாடு அரசு மருத்துவர் ராஜமன்னார் தலைமையில் உருவாக்கியவர், கலைஞர்.
- மாநிலங்களுக்கும் திட்டக்குழு வேண்டும் என்ற தொலைநோக்கோடு, மாநிலத்திட்டக்குழுவை முதன்முதலில் உருவாக்கியவர்.
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கியவர்.
- ‘கண்ணொளி’ திட்டத்தின் மூலம், இலவச கண் சிகிச்சை முகாம்களை ஆரம்பித்து வைத்தவர்.
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, ஏழை மக்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நகர்த்தியவர்.
- தமிழ்நாட்டின் சிறிய கிராங்களையும் இணைக்கும் வகையில், சாலைத் திட்டங்களை உருவாக்கியவர்.
- தமிழ்நாட்டின் அனைத்துக் கிராமங்களும் மின்சாரத் தன்னிறைவு பெற காரணமானவர்.
- இந்தியாவிலேயே முதன்முதலாக காவல்துறை ஆணையத்தை அமைத்தவர்.
- சரியான வாடகை உள்ளிட்ட அம்சங்களை கொண்ட குடியிருப்பு சட்டத்தை கொண்டுவந்தவர்.
- ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தவர்.
- மிகப்பெரிய மனித உரிமைமீறல் இழிவான, கையால் இழுக்கும் ரிக்ஷாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாவை அறிமுகப்படுத்தியவர்.
- சமூகத்தில் முற்றிலும் ஒதுக்குதலுக்கு ஆளாகியிருக்கும் பிச்சைககாரர்களுக்கென்று மறுவாழ்வு மையம் தொடங்கியவர்.
- நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபி திருநாளை, விடுமுறை தினமாய் அறிவித்தவர்.
- உழைப்பாளர்கள் தினமான மே 1ம் தேதியை, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாய் அறிவித்தவர்.
- பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை 31% ஆகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% ஆகவும் உயர்த்தியவர்.
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென தனியாக துறைகளை அமைத்தவர்.
- தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண்களை பணியமர்த்தியவர்.
- தூத்துக்குடிக்கு, பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலையை கொண்டுவந்தவர்.
- நெய்வேலியில், இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தியை கொண்டுவந்தவர்.
- நில விற்பனை வரையறை சட்டம் கொண்டுவந்தவர்.
- சேலம் இரும்பு தொழிற்சாலையை அமைத்தவர்.
- கோயில்களில் குழந்தைகளுக்கான ‘கருணை இல்லம்’ அமைத்தவர்.
- மீனவர்களின் நலன் காக்க, இலவச வீடு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தவர்.
- அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க, ‘அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம்’ தந்தவர்.
- தமிழ்நாட்டில் முதல் விவசாய கல்லூரியாக, கோவை விவசாய கல்லூரியை உருவாக்கியவர்.
- பயனற்ற நிலத்தின் மீதான வரியை நீக்கும் திட்டத்தை கொண்டுவந்தவர்.
- பூம்புகார் கப்பல் நிறுவனத்தை உருவாக்கியவர்.
- கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தவர்.
- இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர்.
- சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று சட்டம் கொண்டுவந்தவர்.
- ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்தை தந்தவர்.
- விதவைப் பெண்கள் மறுமண நிதி உதவி திட்டத்தை தந்தவர்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கியவர்.
- மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்தவர்.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்.
- ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தேர்ந்தெடுத்தவர்.
- பராசக்தி மூலம் தமிழ்த்திரையில் வசனப்புரட்சியை ஏற்படுத்தியவர்.
- ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியவர்.
- தமிழுக்கு செம்மொழி உரிமையை பெற்றுத் தந்தவர்.
- உழவர் சந்தை திட்டத்தை கொண்டுவந்தவர்.
- ‘வருமுன் காப்போம்’ திட்டத்தை கொண்டுவந்தவர்.
- மாணவர்களின் ஊட்டச்சத்துக்காக, சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்த்தவர்.
- மதுரை நீதிமன்றத்தை கட்டியவர்
- .இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டுவந்தவர்.
- அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டுவந்தவர்.
கலைஞர் TV-யில் பென்டிரைவ் யூஸ் பண்ணி வீடியோ பாக்கணுமா அப்போ இதனை மட்டும் பண்ணுங்க போதும்
முடிவுரை:
அவர் முதல்வராக இருக்கும்போது கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தமிழ் மக்கள் பலரின் தலையெழுத்தையே மாற்றியிருக்கிறது. இப்படி இவர் செய்த சாதனைகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். “யாதும் ஊரே யாவருங் கேளீர்” என்ற வரிக்கேற்ப யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று வாழ்ந்தவர் ஐயா கலைஞர் கருணாநிதி அவர்கள்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |