இந்திய ரயில்களில் இப்படி ஒரு வசதி இருக்கா?
ஹாய் நண்பர்களே. எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு பயனுள்ள தகவல் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அது என்ன தகவல் அப்படியென்று யோசிப்பீர்கள். வாங்க நண்பர்களே அந்த தகவல் பற்றி பார்ப்போம்.
ரயில்களை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். நாம் நம் சிறுவயதிலிருந்தே ரயில்களை பார்த்தும் அதில் பயணம் செய்தும் இருக்கிறோம். என்னதான் ரயில்களில் அடிக்கடி நாம் பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் அதை பற்றிய ஒரு சில விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டிருப்போம். நாம் சில முக்கிய விஷயங்களை பற்றி தெரிந்து வைத்திருந்தால் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது வசதியாக இருக்கும்.
நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம் தான் இந்த “ஜர்னி பிரேக்”. இந்த வசதியின் மூலம் ரயில் பயணிகளுக்கு என்ன நன்மை உள்ளது என்று பார்ப்போம்.
ரயில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது தெரியுமா |
ஜர்னி பிரேக் என்றால் என்ன:
“ஜர்னி பிரேக்” என்பது இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிக்க ஒரு ரயில் கிடைக்காவிட்டால் குறைவான கட்டணத்தை பெறுவதற்கு இந்திய ரயில்வே வழங்கிய வசதி ஆகும். இந்தியாவில் உள்ள அதிக மக்களுக்கு தெரியாத ஒரு விஷயம் தான் இந்த “ஜர்னி பிரேக்”. நீங்கள் ஒரு ரயிலில் 500 KM மேல் ஒரு பயண டிக்கெட்டில் பயணம் செய்தால், 501 KM-க்கு அப்புறம் நீங்கள் செல்லும் வழியில் உள்ள எந்த ஒரு ரயில் நிலையத்திலும் இறங்கி 2 நாட்களுக்குள் நீங்கள் மேற்கொண்டு பணம் தராமல் உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
ஜர்னி பிரேக் விதிமுறைகள்:
- 500 KM கும் அதிகமான தூரத்திற்கு ஒரு பயண டிக்கெட் வைத்திருப்பவர்கள், வழியில் எந்த ரயில் நிலையத்திலும் இறங்கி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தங்களின் பயணத்தை முறித்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், தொடக்க நிலையத்திலிருந்து 500 KM தூரம் பயணம் செய்த பின்னரே பயணத்தின் முதல் இடைவேளையை மேற்கொள்ள முடியும்.
- 1000 KM க்கு மேல் உங்களின் பயணச்சீட்டு இருந்தால், நீங்கள் இரண்டு முறை பயணத்தை முறித்துக்கொள்ள அனுமதிக்கபடுவீர்கள்.
- நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தில் 2 நாட்கள் இடைவெளிகளுக்கு மேல் அனுமதிக்கபடமாட்டார்கள். பயணத்தின் இடைவேளையை அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் செய்யலாம்.
- பயணத்தின் போது நீங்கள் செல்லும் முதல் ரயிலில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு குறைந்தபட்சம் 3 மணிநேர இடைவெளியை பெறும் வகையில் இரண்டு ரயில்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதை எது |
- குறிப்பாக, ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் அல்லது சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற சில குறிப்பிட்ட ரயில்களின் டிக்கெட்களில் “ஜர்னி பிரேக்” என்ற வசதி கிடையாது. இதுபோன்ற அனைத்தும் பாயின்ட்-டு-பாயின்ட் கட்டண அமைப்பின் அடிப்படையில் கொண்டுள்ளது.
- ஒரு ரயிலில் பயணம் செய்பவர் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் தங்களின் பயணத்தை முறித்துக் கொண்டால், அந்த ரயில் நிலையத்திலுள்ள ஸ்டேஷன் மாஸ்டரால் டிக்கெட்டுக்கு ஒப்புதல் பெறவேண்டும். ஒப்புதல் பெற தவறினால் பயணத்தின் அடுத்த கட்டத்தில் டிக்கெட் இல்லாத பயணியாக கருதப்படுவார்கள்.
- ஒரு பயணி ஒரு ரயில் நிலையத்தில் தங்களின் பயணத்தை நிறுத்திவிட்டு , மீதமுள்ள பயணத்தை தொடர வேண்டாம் என முடிவுசெய்தால், அது பயணத்தின் இடைவேளையாக கருதப்படாது. மேலும், பயணம் செய்யாத பகுதிக்கான பணத்தை திரும்ப பெறுவதற்கு டிக்கெட்டை வழக்கம் போல் ஒப்படைக்கவேண்டும்.
- “ஜர்னி பிரேக்” டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. ரயில் நிலையத்திலுள்ள முன்பதிவு கவுண்டரில் முன்பதிவு பெற்று அதற்கான தனிப்படிவத்தை நிரப்பவேண்டும்.
- மேலும், இணைக்கும் ரயிலை பிடிப்பதற்காக ஒரு வழித்தடத்தில் இறங்கினால், 24 மணி நேரத்திற்கும் குறைவாக நிறுத்தப்பட்டால் அது இடைவேளைப் பயணமாக கருதப்படாது.
What Does Journey Break Allowed Meaning:
உங்கள் பயணச்சீட்டின் கட்டுப்பாட்டுக் குறியீட்டிற்கு எதிராக காட்டப்படும் கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடப்படும் வரை, ஆஃப்-பீக் ரிட்டர்னின் வெளிப்புறப் பகுதியில் பயணத்தின் இடைவெளி அனுமதிக்கப்படும். மேலும்,உங்கள் பயணத்தின் போது இரவு இடைவேளை நேரத்தில் பயணத்தை முடிக்க முடியாவிட்டால், மறுநாள் பயணத்தைத் தொடர டிக்கெட்டைப் பயன்படுத்தலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |