தேவையற்ற முடி உதிர பாட்டி வைத்தியம்..!
நண்பர்களே வணக்கம்..! அதிகபட்சகமாக அனைத்து இளம் பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அப்படி என்ன பிரச்சனை..? முகத்தில் உள்ள முடி தான். முகத்தில் அதிகளவு மூடி இருப்பதால் முகத்தில் உள்ள அழகு மறைந்து விடுகிறது. அது மிகவும் கஷ்டத்தை அளிக்கிறது. முகத்தில் முடி வளர காரணம் நாம் தான். சிலருக்கு அது அவர்களின் ஜீன்னை பொறுத்து வளரும். ஆனாலும் அதனை வளரவிடாமல் அந்த காலத்தில் உள்ள பெண்களின் பார்த்துக்கொள்வார்கள் .
நம் முன்னோர்கள் நமக்கு சொல்லும் ஒவ்வொன்றிலும் எதோ ஒரு விஷயத்தை மறைத்து சொல்வார்கள். அதனை நாம் பின் பற்றினால் நமக்கு எந்த விதத்திலும் பிரச்சனை வராது. அந்த வகையில் முகத்தில் குளிக்கும் போது மஞ்சள் போட்டு குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் இதுவும் ஒன்று. முகத்தில் முடி வளராமல் இருக்க இதனை செய்ய சொல்வார்கள். இது போன்ற பல விஷயங்களை செய்யமால் பின்பு யோசிப்பார்கள். அந்த வகையில் நிரந்தரமாக முகத்தில் முடி வளராமல் இருக்க வழிகளை பார்ப்போம் வாங்க..!
முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!! |
Multani Mitti Beauty Tips in Tamil:
ஸ்டேப் – 1
- 2 ஸ்பூன் முல்தானி மெட்டி எடுத்துக்கொள்ளுங்கள், பின் கஸ்தூரி மஞ்சள் தூள் 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் – 2
- எடுத்து வைத்த இரண்டு பொருட்களுடன் வீட்டில் இருக்கும் தயிர் எடுத்துக்கொள்ளவும் இல்லையேற்றால் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
ஸ்டேப் – 3
- கலந்து வைத்த மூன்றையும் முகத்தில் பூசிக்கொள்ளவும். அதற்கு மேல் உங்களுக்கு உடலில் எங்கு முடி இருக்கிறதோ அங்கு பூசிக்கொள்ளவும்.
- ஒரு முறை பூசிய காய்ந்த பின் பிறகும் அதன் மீது தடவிக்கொள்ளவும். இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முடி உதிர்வதை நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.
Maida Beauty Tips in Tamil:
ஸ்டேப் -1
- ஒரு 2 ஸ்பூன் மைதா எடுத்துக்கொள்ளவும் அதனுடன் இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ளவும் கடையாக அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -2
- எடுத்துக்கொண்ட மூன்று பொருளையும் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பிறகு முகத்தில் தடவி கொள்ளவும். இதனை முகத்தில் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் தடவிக்கொள்ளலாம். அப்படி வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள் செய்து வந்தால் முடி உதிர்ந்துவிடும்.
ஸ்டேப் -3
- அப்படி உதிரவில்லையென்றால் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு விரைவில் உடலில் உள்ள தேவைற்ற முடி உதிர்ந்து விடும்.
- முகம் தடவிய பின் நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தை ஊறவைக்கவும். ஊறிய பின் கடைசியாக தண்ணீரால் கழுவிக்கொள்ளலாம்.
பெண்களே..! உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க இதை போட்டால் போதும்..! |
ஸ்டேப் -4
- கழுவிய பின் உங்கள் முகம் வறண்டு போகாமல் இருக்க தேங்காய் எண்ணையை முகத்தில் தடவி கொண்டால் முகம் வறண்டு போகாமல் நன்கு பொலிவு தரும். அதுமட்டுமில்லாமல் முடி உதிர்ந்து முகம் பிரகாசமாக காட்சி தரும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |