வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா.?

Updated On: October 23, 2024 11:41 AM
Follow Us:
ஆன்மிக தகவல்கள்
---Advertisement---
Advertisement

ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நம் அனைவருக்குமே திருமணத்தில் அட்சதை இடுவார்கள் என்று தெரியும். ஆனால், எதற்காக அப்படி செய்கிறார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். காலம் காலமாக இந்து மதத்தினர்கள் தங்களது வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் என்று தெரியுமா…? சரி அதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

ஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா .?

 

  • முனை முறியாத அரிசி தான் அட்சதை, நல்ல மங்களங்களை நல்குவது மஞ்சள். அது சென்றடைய ஒரு ஊடகம் தேவை. அதுவே அரிசி இந்த இரண்டையும் இணைக்கும் இணைப்பான் பசு நெய், இது கோமாதாவின் திரவியம்.
  • பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கீழ் விளையும் பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.
  • சற்றே யோசித்தால் இயற்கையில், மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமக்கள் இரு மாண்பினர் வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள், ஒருமித்து வாழத்தக்கவர்கள் அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.
  • ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு அருகே வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறையாகும்.
  • மொத்தமாக மாங்கல்ய தானம் செய்யும் பொழுது தூவி வாழ்த்துவது நன்மையான பலன்களை, அதிகம் வழங்குவது இல்லை என்பது சாஸ்திர உண்மை.
  • மேலும் தமது வாரிசுகள் புதிதாக தொழில் துவங்கும் பொழுதும் சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மஹா லக்ஷ்மி பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது அந்த புதியதாக துவங்கப்பட்ட தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் என்பது சாஸ்திர உண்மை.
  • இந்த அமைப்பில் அமையும் திருமணம், தொழில்கள் மற்றும் சுபகாரியங்கள் அனைத்தும் வெற்றிமேல் வெற்றி பெற்று, சகல நலன்களையும் அடையும் என்பது உண்மை.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now