திமிரு பிடித்த 5 ராசிக்காரர்கள் – Zodiac Signs Who Never Admit When They are Wrong in Tamil
எப்பொழுதுமே எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும் அதனை எப்பொழுதும் வித்தியாசமாக புரிந்துகொள்ளும் நபரிடம் பழகுவது என்பது மிகவும் சிரமான, தரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். காரணம் அவர்களிடம் அதிகளவு சுயநலம், கோபம், ஈகோ போன்ற விஷயங்கள் ஒளிந்திருக்கும். குறிப்பாக அவர்கள் எப்பொழுதுமே அவர்கள் செய்யும் தவறினை ஒற்றுக்கொள்ளவே மாட்டார்கள். மேலும் அவர்கள் தவறுகளை மன்னிக்க முடியாது என்ற குறிக்கோள்களில் அலைபவர்கள். இந்த மன்னிக்க முடியாத பிடிவாத இவர்களது பிறவி குணமாகும்.
சரி இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்களின் தவறை எப்போதும் ஒற்றுக்கொள்ளாத திமிரு பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்:
பிடிவாதம் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்கள் எப்பொழுதுமே அவர்கள் செய்யும் தவறை ஒற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏன் அப்படினா செய்யும் தவறை தெரிந்தேதான் செய்வார்கள் இதன் காரணமாக அவுங்க செய்த தவறை ஒற்றுக்கொள்ளவே மாட்டார்கள். நேர்மையானவராக இருப்பது எவ்வளவு முக்கியம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் தெளிவாக தெரியும். ரிஷபம் ராசிக்காரர்கள் பொதுவாக வகைகள் எடுக்கும் அனைத்து முடிவுகளில் மிக உறுதியாக இருப்பார்கள். அதேபோல் உங்களை பற்றி உங்களிடமே குறை கூறுபவர்கள் சொல்வதை அதை கேட்க தயாராக இருக்க மாட்டிர்கள்.
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்கள் எப்பொழுது கோவத்துடனே திரிபவர்கள். இவர்களிடம் எதை சொன்னாலும் அதனை தவறாக புரிந்துகொண்டு எடுத்தவுடனேயே சண்டைபோட ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களுக்கு கோவம் என்பது பிறவி குணமாகவே இருக்கும். இவர்களுடன் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதே சிறந்த செயலாகும். குறிப்பாக இவர்களிடம் தவறுகளை சுட்டிக்காட்டினால் அது அவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. இவர்களும் செய்த தவறை ஒற்றுக்கொள்ளவே மாட்டார்கள். தவறான புரிதலே இவர்களிடம் இருக்கும்.
விருச்சகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் எப்பொழுதுமே கருத்துக்களில் நியாயமாக இருப்பவர்கள். இவர்களது வாழ்க்கையில் சொந்தமாகவே முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். இவ்வாறு இருக்கும் யாரும் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. எந்த ஒரு விஷயத்திலும் அவர்களது பார்வையில் சிறந்ததாகவே நின்னிற்ப்பார்கள். ஆகவே இவர்களும் அவர்கள் செய்யும் தவறுகளையோ ஒற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்கள் பெதுவாக அமைதியானவர்கள் தான். மற்றவரக்ள் செய்யும் தவறுகளை மன்னித்து அனுசரித்து செல்லக்கூடியவர்கள் என்றாலும். இவர்கள் செய்யும் தவறை மட்டும் எப்பொழுது யாருக்காகவும் ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். இருப்பினும் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனம்புகுவம் கொண்டவர்கள் கும்ப ராசிக்காரர்கள்.
மீனம்:
மீனம் ராசிக்காரர்கள் நேர்மொயான குணம் கொண்டவராக இருந்தாலும் இவர்களிடம். கடுமையான மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இவர்களது கோவத்தை தனது துணையிடமே வெளிப்படுத்துவார்கள். மேலும் இவர்களும் செய்யும் தவறை ஒற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இருப்பினும் மீனம் ராசிக்காரர்கள் அவ்வளவுதாக தவறு செய்ய மாட்டார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |