தினமும் அலாரம் வைத்து தூங்கும் நபரா நீங்கள்.. அப்போ உடல் நல பிரச்சனையையும் நீங்கள் சேர்த்து எழுப்புகிறீர்கள்..! Health why snoozing the alarm in the morning is injurious to health in tamil
பொதுவாக சிலர் தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திரிப்பதற்காக இரவு அலாரம் வைத்து தூங்குவார்கள். அப்படி துவைத்து உண்மையாக நமது உடலுக்கு நல்லது கிடையாது.. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. நீங்கள் தினமும் அலாரம் வைத்து எழுந்திருப்பவரா? அப்படியென்றால் கண்டிப்பாக இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றி. அதனை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள் என்றால் கண்டிப்பா அதற்கு அப்பறம் நீங்கள் அலாரம் வைத்து எழும்பு பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிடுவீர்கள். சரி வாங்க இப்பொழுது அலாரம் வைத்து எழுந்திரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்ப்போம்.
No: 1
அதிகாலையில் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் அலாரம் சத்தம் கேட்டு எழும் போது, மூளை, இதயம் போன்றவைப் பாதிக்கப்படுவதோடு பல்வேறு உடல் நல பிரச்சனைகளும் நமக்கு ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
No: 2
இரவு நாம் தூங்குகிறோமோ.. இல்லையோ.. ஆனால் அதிகாலை நேரத்தில் அனைவருக்குமே நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.. நமது உடலும் அந்த நேரத்தில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும். ஆக நாம் அலாரம் வைத்து எழுந்திருக்கும் போது.
அந்த அலாரத்தினால் ஒருவித பதட்டத்தோடு எழுந்திரிப்போம் அதன் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதோடு நீரழிவு, உடல் பருமன், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்திக்ககூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
No: 3
அலாரம் வைத்து எழுந்திருக்கும் போது உங்கள் இதயம் மற்றும் நரம்பு மண்டலம் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படும்.
No: 4
குறிப்பாக மூளையில் நரம்பியல் மண்டலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. மேலும் அலாரம் சத்தத்தை அணைத்துவிட்டு மீண்டும் 5 நிமிடம், 15 நிமிடம் என Snoozing-யில் வைத்து மீண்டும் தூங்கும் போது உங்கள் மூளையில் ஒருவித அதிர்வு ஏற்பட்டு நரமபு மண்டலம் அளவு பாதிக்கப்படும்.
No: 5
இதனை தொடர்ந்து மேற்கொள்ளும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இப்பொழுது தெரிந்துகொண்டீர்களா? இனியாவது இந்த பழக்கத்தை விட்டுவிட்டு நீங்களாவே எழுந்திரிக்க பழகிக்கொள்ளுங்கள். இரவு நேரத்தில் சீக்கிரம் உறங்குங்கள். தேவை இல்லாத விஷயங்களை மனதில் நினைத்துக்கொண்டும் இருந்தாலே இரவு நேரத்தில் சீக்கிரம் தூக்கம் வராது ஆக மனதை அமைதிப்படுத்துங்கள், மேலும் டிவி, மொபைல் இது விஷயங்களை அதிக நேரம் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். இதனை செய்தாலே இரவில் சீக்கிரம் தூக்கம் வரும் மற்றும் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |