வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஐங்குறுநூறு நூல் குறிப்பு | Ainkurunuru with Explanation in Tamil

Updated On: October 1, 2024 3:53 PM
Follow Us:
Ainkurunuru in Tamil
---Advertisement---
Advertisement

ஐங்குறுநூறு விளக்கம் | Ainkurunuru in Tamil

எட்டுத்தொகை இலக்கியங்களுள் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அக இலக்கியம் தான் ஐங்குறுநூறு. இந்த ஐங்குறுநூறு பாடலில் மொத்தம் 500 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் சங்க காலத்தை சேர்ந்தவை ஆகும். ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணைப் பாடல்களும், ஒவ்வொரு புலவரால் இயற்றப்படுள்ளன. ஆகமொத்தம் ஐந்து புலவர்கள் இவற்றை இயற்றியுள்ளனர். சங்க இலக்கிய தொகை நூல்களுள் பல சிறப்புகளை பெற்றுள்ளது ஐங்குறுநூறு. வாங்க இந்த பதிவில் ஐங்குறுநூறு நூல் விளக்கத்தினை தெரிந்துக்கொள்ளுவோம்.

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

ஐங்குறுநூறு நூல் சிறப்புகள்:

சங்க இலக்கியங்களுள் மூன்றடியிலும் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு தான். இந்த நூலினை தவிர வேறு எந்த நூலிலும் மருத திணை பாடல்கள் முதலாவதாக வைக்கப்படவில்லை. ஐங்குறுநூற்றில் வேளாண் பற்றிய சிந்தனைகள் அதிகமாக கிடைக்கிறது.

ஐங்குறுநூற்றின் உருவம்:

ஐங்குறுநூற்றின் திணை  அகத்திணை 
பாவகை  ஆசிரியப்பா
பாடல்கள் 500
பாடல் பாடியவர் எண்ணிக்கை  05
பாடல் அடிகளின் எண்ணிக்கை  3-6

ஐங்குறுநூறு தொகுப்பு:

  • ஐங்குறுநூற்றை தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

ஐங்குறுநூறு என்று பெயர் வர காரணம்:

  • ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
  • குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

நூலின் உரை பதிப்பு:

  • முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்
  • முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை

பாடியவர்கள்:

திணை  பாடியவர்கள் 
மருதம் திணை ஓரம்போகி
நெய்தல் திணை அம்மூவன்
குறிஞ்சி திணை கபிலர்
பாலை திணை ஓதலாந்தை
முல்லை திணை பேயனார்

கடவுள் வாழ்த்து:

  • இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

ஐங்குறுநூறு நூலின் பகுப்புகள்:

  • ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் எனப் பத்து பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு பத்து பாடல்களின் தலைப்பும் “பத்து” என முடிகிறது.
  • குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.

நூலில் உள்ள அரசர்கள்:

கடுமான் குட்டுவன்
ஆதன் அவினி
கொற்கை கோமான் மத்தி

 

எட்டுத்தொகை நூல்கள் யாவை

ஊர்கள்:

தொண்டி தேனூர்
கழார்(காவிரி) கொற்கை

கிடைக்காதவை:

ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now