வானிலை செய்திகள் தமிழ்நாடு | Vaanilai Seithigal
Vaanilai Arikkai in Tamil Today 2022 / இன்றைய வானிலை: தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் வெயில் கடுமையாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் மக்களை மகிழ்ச்சி நிலையில் வைத்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் மழை காலம் வந்து விட்டாலே இன்று எந்த மாவட்டத்தில் அதிக மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள செய்தியை தினம்தோறும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வெளியில் பணிக்கு செல்லும் நபர்களுக்கு வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் வானிலை செய்திகளை தெரிந்துக்கொள்ள நேரம் இருக்காது. அவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் வானிலை செய்திகளை (vaanilai seithigal) பற்றி அப்டேட் செய்கிறோம். இந்த பதிவானது அனைவருக்கும் மிக பயனுள்ள பதிவே.. அனைவரும் படித்து பயன் அடையுங்கள்..!
சென்னையில் மின்தடை |
வானிலை செய்திகள் தமிழ்நாடு
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் ‛மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் கனமழை அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது அது குறித்த தகவலை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்:
மாண்டஸ் புயல்:
இந்த மாண்டஸ் புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோமீட்டரிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ள துறைமுகங்கள்:
எண்ணூர், கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட உள்ளது.
இன்றைய மழை அறிக்கை (08.12.2022):
புயல் காரணமாக இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் அதிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய உள்ளது.
நாளைய வானிலை நிலவரம்:
நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பலத்த மழையு பெய்ய உள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்:
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், இந்த புயல் புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையை கடக்கலாம். இதனால் டிசம்பர் 9 மற்றும் நாளை டிசம்பர் 10 ஆகிய நாட்களில் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |