தமிழ் அலகிட்டு வாய்பாடு | Alagitu Vaipadu Tamil
நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்றைய பதிவில் அலகிட்டு வாய்ப்பாடு பற்றி பார்க்கலாம். இந்த அலகிட்டு வாய்ப்பாடானது மாணவர்கள் எழுதும் பொது தேர்வுகளில் தமிழ் மொழிப்படத்தில் இரண்டாம் தாளில் கேட்கப்படுகிறது. இந்த அலகிட்டு வாய்ப்பாட்டிற்கு முழுமையாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அழகிரு வாய்ப்பாட்டை நன்றாக புரிந்துகொண்டால் ஈசியாக மார்க் வாங்கலாம். வாங்க அலகிட்டு வாய்ப்பாடு (alagitu vaipadu) பற்றி விரிவாக காண்போம்.
பெருக்கல் வாய்ப்பாடு |
அலகிட்டு வாய்ப்பாடு எப்படி பிரிக்க வேண்டும் | alagitu vaipadu:
- alagitu vaipadu for thirukural in tamil: திருக்குறளில் முதலாம் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் மொத்தம் 7 சீர்கள் இடம்பெற்றுள்ளது.
- சீர்களை அவற்றிலுள்ள அசைகளின் அடிப்படையில் பிரிப்பதே அலகிட்டு வாய்ப்பாடாகும்.
- ஒரு சீர்களை பிரிக்கும் போது மெய்யெழுத்திற்கு பக்கத்தில் கோடிடவும்.
- நெடில் பக்கத்தில் கோடிடவும்
- இருகுறில் அடுத்து கோடிடவும்
- ஒற்று, ஆய்தம், அலகு பெறாது எனவே அவற்றை நீக்கி ஓர் எழுத்து இருப்பின் நேரசை எனவும், இரண்டு எழுத்துக்கள் இருப்பின் நிரையசை எனவும் நினைவில் கொள்ளவும்.
நினைவில் கொள்ளவேண்டியவை:
- அலகிட்டு வாய்ப்பாட்டில் இரு நெடில்கள் சேர்ந்து வராது. நெடில் எழுத்திற்கு பிறகு குறில் சேர்ந்து வராது.
- சீரின் முதலிலோ, இடையிலோ தனிக்குறில் வராது. கடைசியில் மட்டும் தனியாக வரும்.
- வெண்பாவில் ஒரு ஈரசைசீர் எந்த அசையில் முடியுமோ அதற்கு எதிரசையில் அடுத்த சீர் தொடங்கும்.
- வெண்பாவில் கடைசிசீர் ஓரசை சீராகத்தான் வரும்.
- நேர் அல்லது நிரை அசைகளில் ஒன்றனை கொண்டு முடியும்.
- கடைசி சீர் குற்றியலுகரத்தில் (கு, சு, டு, து, பு, று) முடிந்தால் நேர்பு அல்லது நிரைபு என்ற அசைகளில் ஒன்றனை கொண்டு முடியும். நேர்பு – காசு, நிரைபு – பிறப்பு எனும் வாய்ப்பாடுகளை பெறும்.
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை |
அலகிட்டு வாய்ப்பாடு | அலகிட்டு வாய்பாடுFormula:
அலகிட்டு வாய்பாடு திருக்குறள்:
- ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
சீர் | அசை | வாய்ப்பாடு |
ஒழுக்/ கத்/ தின் | நிரை / நேர் / நேர் | புளிமாங்காய் |
எய்/ துவர் | நேர் / நிரை | கூவிளம் |
மேன்/ மை | நேர் / நேர் | தேமா |
இழுக்/ கத்/ தின் | நிரை / நேர் / நேர் | புளிமாங்காய் |
எய்/ துவர் | நேர் / நிரை | கூவிளம் |
எய்/ தாப் | நேர் / நேர் | தேமா |
பழி | நிரை | மலர் |
இந்த குறட்பா “மலர்” எனும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது. |
2. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
சீர் | அசை | வாய்ப்பாடு |
பொரு/ ளென்/ னும் | நிரை / நேர் / நேர் | புளிமாங்காய் |
பொய்/ யா | நேர் / நேர் | தேமா |
விளக்/ கம் | நிரை / நேர் | புளிமா |
இரு/ ளறுக்/ கும் | நிரை / நிரை / நேர் | கருவிளங்காய் |
எண்/ ணிய | நேர் / நிரை | கூவிளம் |
தேயத்/ துச் | நேர் / நேர் / நேர் | தேமாங்காய் |
சென்/ று | நேர்பு | காசு |
இந்த குறட்பா “காசு” எனும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது. |
3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
சீர் | அசை | வாய்ப்பாடு |
ஒழுக்/ கம் | நிரை / நேர் | புளிமா |
விழுப்/ பம் | நிரை / நேர் | புளிமா |
தர/ லான் | நிரை / நேர் | புளிமா |
ஒழுக்/ கம் | நிரை / நேர் | புளிமா |
உயி/ ரினும் | நிரை / நிரை | கருவிளம் |
ஓம்/ பப் | நேர் / நேர் | தேமா |
படும் | நிரை | மலர் |
இந்த குறட்பா “மலர்” எனும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது. |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |