மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் | Mattu Pongal Nalla Neram
மாட்டு பொங்கல் என்பது தை பொங்கலுக்கு மறுநாள் உழவர் திருநாள் என்று சொல்லக்கூடிய மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கலானது கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கல் அன்று மாடுகள் இருக்கும் தொழுவத்தை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி மாட்டிற்கு மஞ்சள், குங்குமம், கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் சலங்கை கட்டி மாட்டினை அழகுபடுத்துவார்கள்.
மாட்டினை அலங்கரித்த பிறகு மாட்டின் தொழுவத்திலே பொங்கல் வைத்து மாட்டிற்கு தீபம் காட்டி வழிபாடு செய்வார்கள். மாட்டு பொங்கல் அன்று உலக புகழ்ப்பெற்ற விழாவான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இது தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்த பதிவில் மாட்டு பொங்கலுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் மாட்டிற்கு பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்..! kaanum pongal wishes 2025
மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் 2025:
இந்த ஆண்டு 2025 மாட்டு பொங்கல் ஆனது, ஜனவரி 15 ஆம் தேதி (தை 02 ஆம் நாள்) அன்று வருகிறது. அன்றைய தினத்தில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவார்கள். மாட்டு பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் பார்த்து தான் வைப்பார்கள்.
அன்றைய தினத்தில் காலை 09.30 AM மணி 10.30 AM வரை மாட்டு பொங்கல் வைக்க நேரம் உள்ளது. அதேபோல் மாலை 04.30 PM மணி முதல் 05.30 PM மணி நேரம் வரை மாட்டு பொங்கல் வைக்க நேரம் உள்ளது. இந்த நேரத்தில் மாட்டுப்பொங்கல் வைத்து பூஜைகளை மேற்கொள்ளலாம்.மாட்டு பொங்கல் வழிபாடு:
விவசாயிகளின் நண்பனாக இருக்கும் மாடுகளை, அன்றைய தினத்தில் குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் வைத்து ஆராதனை காட்டி மாலை மலர்களால் அலங்கரித்து, மாடுகளுக்கு பொங்கல் மற்றும் சாம்பார் வைத்து ஊட்டி விடுவார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |