How to Make Homemade Permanent Black Hair Dye
நண்பர்கள்..! உங்களுக்கு நரை இருக்கிறதா..? இந்த அரை முடி வயதானவர்கள் மட்டும் தான் வரும். ஆனால் இப்போது சிறு வயதில் உள்ளவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகிறது. ஒரு சிலருக்கு வயது ஆனால் கூட நரை முடி இல்லாமல் கருமையாக இருக்கிறது. இதற்கு என்ன தான் காரணம் எதனால் தான் இந்த நரை முடி பிரச்சனை வருகிறது.
நம் அனைவருக்கும் தெரியும் உடலில் தேவையான அளவு சத்துக்கள் இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக நரை முடி பிரச்சனை வந்துகொண்டு தான் இருக்கும். இந்த நரை முடியை எப்படி கருமையாக மாற்றுவது என்று நினைத்து தினமும் ஒவ்வொரு விதமான ஷாம்பு சீயக்காய், எண்ணெய் என மாற்றி மாற்றி தலை முடி உதிர்வுக்கு வழி வகுக்கும்.
உங்களில் யாருக்கு தெரியும் ஒரு ஹேர் டை முடி உதிர்வுக்கு, தலைமுடி வளர்வதற்கு, நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு உதவும் என்று. அது எப்படி செய்வது என்று உங்களில் நிறைய நபர்களுக்கு கேள்வியாக இருக்கும். சரி வாங்க அது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Homemade Permanent Black Hair Dye in Tamil:
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – 1 கைப்பிடி
- பெரிய வெங்காயம் – 1
- மருதாணி – 1 கைப்பிடி
- சங்கு பூ – 30 காய்ந்தது
- செம்பருத்தி பூ – 30 காய்ந்தது
- காபித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
அவ்வளவு தான் செய்முறையை பார்க்கலாம் வாங்க..! முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதில் கருவேப்பிலை, பெரிய வெங்காயம், மருதாணி இலை அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த பிறகு அதில் உள்ள சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டி அதை அப்படியே தனியாக வைக்கவும்.
அடுத்து ஒரு கடாயில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் செம்பருத்தி பூ, சங்கு பூ போட்டு கொதிக்கவிடவும். அதன் பின்பு அதை ஓரளவு கொதிக்கும் போது அதில் 1 டேபிள் ஸ்பூன் காபி தூள் சேர்க்கவும். அது நன்றாக கொதிக்கவும். அந்த பூக்களின் நிறம் மாறிவரும். அப்போது அடுப்பை விட்டு இறக்கி அதனையும் வடிகட்டி எடுத்துகொள்ளவும்.
அடுத்து வடிகட்டிய பூவை மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த பிறகு அதில் இருக்கும் சாறையும் வடிகட்டி முன்பு வடிகட்டி வைத்ததில் ஊற்றவும்.
இப்போது இரண்டையும் வடிகட்டி எடுத்துக்கொண்டு ஒரு கடாயில் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவும். அது ஒரு மாதிரி பேஸ்ட் பதத்திற்கு வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு அதனை ஆறவிடவும். அவ்வளவு தான் ஹேர் டை ரெடி அப்ளை செய்யவேண்டும்.
பயன்படுத்தும் முறை:
முதலில் உங்கள் தலையில் எண்ணெய் வைத்திருக்கவேண்டும். அப்போது தான் உங்கள் தலைமுடியும் இந்த ஹேர் டை தலையில் அப்ளை முடியும். ஆகவே அப்ளை செய்து காயவிட்டு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்கவும். அவ்வளவு தான் தலை முடி கருமையாக மாறிவிடும்.
வெள்ளை முடி வெளியே தெரிகிறதா இந்த இயற்கை ஹேர் டை போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |