முருங்கைக்காய் பொடி செய்வது எப்படி.?
முருங்கைக்காய் என்பது பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இந்த முருங்கைக்காயை எல்லா குழம்பிலும் சேர்த்து வைக்கலாம். ஆனால் சாம்பாரில் இந்த முருங்கைக்காயை சேர்த்தால் அதன் ருசியே வேறு மாதிரி தான் இருக்கும். ஆனால் இந்த முருங்கைக்காய் எப்டோதுமே கிடைக்காது. சீசன் டைம்ல மட்டும் தான் கிடைக்கும். அதனால் இந்த முருங்கைக்காயை பொடியாக செய்து வைத்து நீங்கள் சாம்பார் வைக்கும் போது சேர்த்தால் முருங்கைக்காய் சேர்த்து வைத்தது போல இருக்கும். சரி வாங்க முருங்கைக்காய் பொடி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
Ingredients
- முருங்கைக்காய்-10
- காய்ந்த மிளகாய்-6
- துவரம்பருப்பு-50 கிராம்
- பாசிப்பருப்பு- 25 கிராம்
- பூண்டு- 15 பற்கள்
- கருவேப்பிலை- ஒரு கைப்பிடியளவு
- பெருங்காய தூள்- சிறிதளவு
- உப்பு- சிறிதளவு
- மிளகு, சீரகம்- 3 தேக்கரண்டி
Instructions
முருங்கைக்காய் பொடி செய்முறை:
முதலில் முருங்கைக்காயை எடுத்து அதன் தோலை நீக்கி விட்டு, அதன் உள்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு நன்றாக காய வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இரும்பு சட்டியை வைத்து அதில் துவரப்பருப்பு சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்க வேண்டும். சிவந்த நிறம் வந்ததும் பிறகு தனியாக எடுத்து வைத்து விட வேண்டும்.
பின் அதே கடாயில் பாசிப்பருப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பிறகு மிளகு சீரகம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்ததாக காய வைத்த முருங்கைக்காயை லேசாக வதக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டு, கருவேப்பிலை. பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இந்த வதக்கிய பொருட்கள் எல்லாம் சூடு ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
இட்லி பொடிய இப்படி செஞ்சி பாருங்க..! ரெண்டு இட்லி கூட சாப்பிடுவீங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |