தமிழ் கிராமத்து பழமொழிகள்
|
அடக்கமே பெண்ணுக்கு அழகு |
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா |
கண்டதே காட்சி கொண்டதே கோலம் |
ஆரால் கேடு, வாயால் கேடு |
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும் |
ஐந்திலே வளையாதது, ஐம்பதிலே வளையுமா? |
தனி மரம் தோப்பாகாது |
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம் |
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு |
மாரடித்த கூலி மடி மேலே |
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான் |
குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான் |
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? |
குரங்கின் கைப் பூமாலை |
கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி |
பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு |
அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும் |
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான் |
கதிரவன் சிலரை காயேன் என்குமோ? |
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் |
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு |
தேன் ஒழுக பேசி , தெருவழியே விடுகிறது |
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் |
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும் |
இட்டவர்கள், தொட்டவர்கள் கெட்டவர்கள், இப்போது வந்தவர்கள் நல்லவர்கள். |
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி |
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு |
காற்றில்லாமல் தூசி பறக்குமா? |
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? |
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது |
அறிய அறியக் கெடுவார் உண்டா? |
மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா? |
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் |
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் |
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை |