உலக சுகாதார தினம் என்றால் என்ன மற்றும் அவை ஏன் முக்கியம்..

Advertisement

உலக சுகாதார தினம் என்றால் என்ன.?

நம் முன்னோர்களின் காலத்தில் வாகனங்கள் என்பது ஊருக்கு ஒருத்தர் வீட்டில் தான் இருக்கும். சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியில் தான் பயணித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சைக்கிளை ஒரு வீட்டிலும் பார்க்கமுடியவில்லை. அனைவரது வீட்டிலும் வண்டி மற்றும் கார் என பல மாடல்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஊரும் சரி நாடும் சரி மாசுபாடு அடைகிறது. இதனால் பல நோய்களும் ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 7ம், தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் நமக்கு உலக சுகாதார தினம் என்றால் என்ன, அவை ஏன் கொண்டாடபடுகிறது என்றெல்லாம் தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் உலக சுகாதார தினம் என்றால் என்ன, அவை ஏன் முக்கியம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உலக சுகாதார தினம் என்றால் என்ன:

உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் அனுசரணையின் கீழ் கொண்டாடப்படும் உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு தினமாகும் . 1950 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டாட முதல் உலக சுகாதார சபை முடிவு செய்தது. உலக சுகாதார தினம் WHO வின் ஸ்தாபகத்தை குறிக்கும் வகையில் நடத்தப்படுகிறது, மேலும் இது ஒரு விஷயத்தின் மீது உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.

உலக சுகாதார தினம் ஏன் முக்கியம்:

 உலக சுகாதார தினமானது மனிதர்களின் உடல் மற்றும் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சுகாதார துறையில் முக்கியமான மாற்றங்களை கண்டுபிடித்தது. பல் தொற்று நோய்களை சரி செய்வதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நம்முடைய ஆயுட்காலம் நீட்டித்தது. இதனை கொண்டாடும் நோக்கத்தில் தான் ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. 

மனிதர்களின் வாழ்க்கை முறையானது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக WHO ஆனது 1948-ம் ஆண்டு முதல் பல நாடுகளால் ஒன்றிணைந்து நிறுவப்பட்டது. முதல் உலக சுகாதார தினமானது 1950-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி கொணடாடப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து வருடந்தோறும் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

மக்களுக்கு சுகாதாரத்தை பற்றி சொல்வதற்கும், சுகாதார பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் புதிய மருந்துகள் மற்றும் சுகாதார வசதிகளை அனைவரும் பெறுவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆரோக்கியத்தை கவனித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை குறிக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Information in Tamil

 

Advertisement