Raththam Veru Peyargal in Tamil
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக மனிதாக பிறந்த அனைவருக்குமே ஒன்றுக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருப்பது சகஜம் தான். ஆனால் நாம் பேசும் வார்த்தைகளுக்கும் ஒன்றுக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் பெயர்களை பற்றி தான் நம் பதிவின் வாயிலாக தினமும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று இரத்தம் என்பதன் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி வாங்க நண்பர்களே இரத்தம் என்பதன் வேறு பெயர்களை அறிந்து கொள்வோம்.
இரத்தம் என்றால் என்ன..?
இரத்தம் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு உயிர்களுக்கும் இரத்தம் எவ்வளவு முக்கியம் என்று நமக்கே நன்றாக தெரியும். இரத்தம் என்பது உடல் உயிரணுக்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஓர் உடல் திரவம் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக அந்த காலங்களில் இரத்தம் என்பதை அரத்தம் என்று தான் சொல்வார்கள். அதிலும் அரத்தம் என்பது தான் தூய தமிழ்ச்சொல் ஆகும்.
அர் – என்கிற மூலச்சொல் சிவப்பு நிறத்தைக் குறித்த சொற்களுக்காக – நம் முன்னோர் உருவாக்கியவைகளில் ஒன்றாக இருக்கிறது.
அர் என்ற சொல்லானது அரத்தம் என செந்நிறக் குருதியைக் குறித்து பின் “ரத்தம்” என்று உருமாறியது.
சிறுவன் என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா..?
இரத்தம் வேறு பெயர்கள்:
- குருதி
- அரத்தம்
- இரத்தம்
- உதிரம்
- எருவை
- செந்நீர்
இரத்தத்தை மேல்கூறிய பெயர்களாலும் அழைப்பார்கள்.
இரத்தம் வடசொல்:
இரத்தம் என்பது ”ரக்த (Rakta)” என்னும் வடசொல்லை கொண்டுள்ளது. தமது இலக்கணத்துக்குள் தமக்கு ஏற்றார்ப்போல் மாற்றி தத்தெடுத்துக் கொண்ட வடமொழி சொல் தான் இரத்தம் என்பதாகும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |