வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டம்
வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடன் வழங்குவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் வெளியிட்டுள்ளார். விவசாயிகளுக்காக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் கடன் பெற முடியும் இன்னும் பல தகவல்களை தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ அரசு வழங்கும் ரூ.10,000 மானியம்! எதற்கு தெரியுமா?
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்:
வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய பணிகளுக்கு விவசாயிகள் ஒன்றுப்பட்டு சமுதாய ரீதியாக உருவாக்கப்படும் வேளாண் கட்டமைப்புகளுக்கு வங்கிகளில் அதிகபட்ச தொகையாக Rs. 2 கோடி வரை இத்திட்டத்தில் கடன் பெற்று கொள்ளலாம் இந்த கடனுக்கு 3 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எந்தெந்த பணிகளுக்கு கடன் வசதி அனுமதிக்கப்பட்டது:
அறுவடைக்கு பிறகு செய்யும் பணிகளுக்கான உட்கட்டமைப்புகள்:
மின்னணு சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை (Supply chain services including e-marketing platforms), சேமிப்புக்கிடங்குகள் (Warehouses), சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள் (Pack Houses), விளைபொருளின் தரத்தை அளவிடும் அமைப்புகள் (Assaying Units), தரம் பிரித்து, வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள் (Cold Chains), போக்குவரத்து வசதிகள் (Logistics Facilities), முதன்மை பதப்படுத்தும் மையங்கள் (Primary Processing Units), அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் (Ripening Chambers), தகுதி வாய்ந்த கட்டமைப்புகளுக்கு சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்துதல்
சமுதாய ரீதியாக விவசாயிகள் ஒன்றுபட்டு ஏற்படுத்திய உட்கட்டமைப்புகள்:
விவசாயிகள் குழுக்களாக இணைந்து, விதை சுத்திகரிப்பு, திசு வளர்ப்பு, நாற்றுப் பண்ணை போன்ற இடுபொருள் உற்பத்தி, விநியோகத்தொடர் கட்டமைப்பு, வேளாண்மை இயந்திர வாடகை மையம், சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், பண்ணைப்பணிகளையும், அறுவடைப்பணிகளையும் தானியங்கி மூலம் நவீனமயமாக்குதல், துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், ஆளில்லா விமானம் (Drone), காளான் வளர்ப்பு மற்றும் பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் போன்றவை.
எந்த தேதியிலிருந்து கடன் பெற்றவர்களுக்கு வட்டி தள்ளுபடி கிடைக்கும்.
இத்திட்டம் செயலுக்கு வந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி முதல் அல்லது அதற்கு பிறகு அனுமதிக்கப்பட்ட வங்கிகளில் கடன் மானியம் பெற்றுக்கொள்ள முடியும்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும்?
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக்குழுக்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில்முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள் (Start ups), மத்திய / மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு-தனியார் பங்கேற்புடன் கூடிய அமைப்புகள், மாநில முகமைகள்/ வேளாண் விளைபொருட்கள் விற்பனைக்குழுமங்கள் (APMCs), தேசிய மற்றும் மாநில கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புகள், நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், உணவு பதப்படுத்துவோர், உபகரணங்கள் தயாரிப்போர் இத்திட்டத்தில் கடன் வசதி பெறலாம்.
கடன் எப்படி பெறுவது:
கடன் வசதி பெற வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களையோ, வங்கி மேலாளர்கள் அல்லது நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர்களையோ சென்று இத்திட்டத்தில் பயனடையுங்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |