சூரிய கிரகணம் அன்று பள்ளி விடுமுறை
சூரிய கிரகணம் வரும் திங்கட்கிழமை வருகின்றது. இந்த சூரிய கிரகணம் ஆனது அறிவியல் ரீதியாகவும் சரி, ஆன்மிக ரீதியாகவும் சரி மிகவும் நன்மை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனது ஏப்ரல் 8-ம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் ஆனது அமெரிக்காவின் நயாகரா பகுதியில் நிகழவுள்ளது. இந்த நாளில் சாலைகள் ஆனது பெரும் கூட்டமாக இருக்கும். இதனை தடுப்பிப்பதற்கு அரசு சில முடிவுகளை எடுத்திருக்கிறது. அதில் ஒன்று தான் பள்ளி விடுமுறை. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
April 8 School Leave News in Tamil:
அமெரிக்காவின் நயாகரா பகுதியில் உள்ள அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு ஏப்ரல் 8-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் அன்று மக்கள் அனைவரும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு வருவார்கள். அதனால் அந்த பகுதியை தயாராக வைத்து கொள்வதற்கு ஏராளமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
முழு சூரிய கிரகணம் ஆனது சந்திரன் சூரியனின் கதிர்களை சில நிமிடங்களுக்கு தடுக்கும் என்று பிராந்திய தலைவர் ஜிம் பிராட்லி கூறுகிறார். நயாகரா நீர்வீழ்ச்சி சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சிறந்த இடமாக இருக்கும் என்று நேஷனல் ஜியோகிராஃபிக் கூறியுள்ளது.
சூரிய கிரகணம் அன்று சாலைகளில் பயணிக்கும் போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். நீங்கள் சாலையில் பயணிக்கும் போது சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக வண்டி அல்லது காரில் இருந்து இறங்க கூடாது என்றும், அதனை போட்டோ எடுக்க கூடாது என்றும் கூறியுள்ளது.
ஏப்ரல் 8-ம் தேதி ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று போலீசார் கணித்துள்ளார்கள். மொபைல் போன் நெட்ஒர்க், போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |