Oru Viral Puratchi Quotes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு விரல் புரட்சி கவிதை பற்றி பார்க்கலாம். ஒரு விரல் புரட்சி பற்றி நம் அனைவருக்கும் தெரியும். மக்கள் ஒரு ஒரு விரல் புரட்சி மூலம் இந்திய நாட்டை வளர்ச்சி அடைய செய்ய முடியும். ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு பிறகு, ஆட்சியாளர்களும் அரசாங்கமும் மாற்றி அமைக்கப்படும். இதுவே, ஜனநாயக வழக்கமாகும். இதற்காகவே காலம் காலமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. யார் நாட்டை ஆளவேண்டும்? யார் ஆளும் அதிகாரத்திற்குப் பொருத்தமானவர்கள் என்பதை தீர்மானிக்க மக்களுக்கு கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை வாக்குரிமை ஆகும். இந்த வாக்குரிமை என்னும் ஒரு ஒரு விரல் புரட்சி அனைவருக்கும் நன்மை அளிக்கும்.
ஒரு விரல் புரட்சி கவிதை:
“செய்திடுவோம் ஒரு விரல் புரட்சி!
தேவையில்லை அதற்கென தனி ஒரு பயிற்சி!
நடந்தது, நடப்பதை நினைத்து பார்க்க ஒரு சிறு முயற்சி,
செய்து விட்டால் போதுமே
நடந்திடும் புது எழுச்சி !
வாக்காளர்களே! உங்களது மலர்ச்சி,
அதில் தான் உள்ளது வெற்றியின் சுழற்சி !
வாக்குகளால் நீங்கள் செய்ய போகும் அந்த புரட்சி..
தந்திடும் நாளைக்கு அதிவேக வளர்ச்சி !
எனவே, சிறிதும் அடையாதீர் அயர்ச்சி ,
உங்கள் விரல்களே தோற்றுவிக்கும்
புது சமுதாய மறுமலர்ச்சி!
ஆகவே, ‘கவனம்’!
வாக்குகள் மாற வேண்டாம் ‘நோட்டாக’
ஆகட்டுமே அவையே தீமைக்கு ‘வேட்டாக’.
ஆற்றிடுவோம் வாக்களித்து
நம் ஜனநாயக கடமை!
போற்றிடுவோம் வாக்களிப்பது
என்றும் நம் உரிமை!”.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |