தலை முடி 2 மடங்கு அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை | Homemade Hair Growth Oil in Tamil
இப்போது இருக்கும் அவசர உலகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே, அவர்களுது தலைமுடிக்கு சரியான பராமரிப்பு முறையினை மேற்கொள்வது இல்லை. அதன் காரணமாக அதிகமாக முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சரி வாங்க இரண்டு மடங்கு இயற்கையான முறையில் தலை முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று இப்போது இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு, அதாவது வெந்தயம், செம்பருத்தி, கருவேப்பிலை மற்றும் கற்றாழை கொண்டு எப்படி எண்ணெய் தயாரித்து முடியின் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Homemade Herbal Hair Oil For Hair Growth in Tamil:

வெந்தயம் மற்றும் கருவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
- தேய்காய் எண்ணெய் – 100 மில்லி.
- வெந்தயம் – இரண்டு ஸ்பூன்.
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு.
முடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை..!
ஸ்டேப்: 1
- அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அவற்றில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.
- பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தேங்காய் எண்ணெயை சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடேறியதும், இரண்டு ஸ்பூன் வெந்தியத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
- வெந்தயம் நன்றாக சிவந்ததும் அதனுடன் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும்.
- இப்பொழுது எண்ணெயானது பச்சை நிறத்தில் மாறும் அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து எண்ணெயை இறக்கி நன்றாக ஆறவைக்கவும். எண்ணெய் நன்றாக ஆறியதும் வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஒருநாள் முழுவதும், காச்சிய இந்த எண்ணெயை சூரிய வெளிச்சத்தில் வைத்திருக்க வேண்டும்.
ஸ்டேப்: 3
அவ்வளவு தான் தலைமுடி வளர இயற்கை கூந்தல் எண்ணெய் தயார். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வர. முடி உதிர்வு பிரச்சனை நின்று, முடி நன்கு வளர ஆரம்பிக்கும். அது மட்டுமல்ல முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
கற்றாழை எண்ணெய் தயாரிக்கும் முறை:
இந்த கற்றாழை எண்ணெய், தலை முடி நன்கு வளர மிகவும் பயன்படுகிறது. அதேபோல் இளநரை உள்ளவர்கள் இந்த கற்றாழை எண்ணெயை தினமும் தேய்த்து வர நரை முடி கருமையாக மாறிவிடும். கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலை முடி நன்கு வளர மிகவும் உதவும். சரி வாங்க இந்த கற்றாழை எண்ணெய் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம்.
தேவையான பொருட்கள்:-
- கற்றாழை – ஒரு மடல்
- தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
- வெந்தயம் – இரண்டு ஸ்பூன்
செய்முறை:-
ஸ்டேப்: 1
இந்த கற்றாழை எண்ணெய் தயார் செய்வதற்கு முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து அவற்றின் நடுப்பகுதியை இரண்டாக வெட்ட வேண்டும்.
அதன் பிறகு அதனுள் இரண்டு ஸ்பூன் வெந்தியத்தை வைத்து நன்றாக அழுத்திவிடவும். பின்பு வெட்டிய இரண்டு பகுதியையும் ஒன்றாக சேர்த்து இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
பின் இரண்டு நாட்கள் கழித்து இந்த கற்றாழையை எடுத்து பார்த்தால் வெந்தயம் நன்றாக ஊறி இருக்கும். இப்பொழுது அந்த கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
அதன் பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அவற்றில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய் நன்கு சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நறுக்கி வைத்துள்ள கற்றாழையை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். அதாவது 10 முதல் 15 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெயை காய்ச்ச வேண்டும்.
ஸ்டேப்: 4
அவ்வளவுதான் கற்றாழை எண்ணெய் தயார் இந்த எண்ணெயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் பயன்படுத்திய இரண்டு வாரத்திலேயே நல்ல மாற்றத்தை உணர முடியும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி பூ இது இரண்டும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. எனவே, வீட்டில் இந்த எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
முதலில் நல்ல நிலையில் உள்ள செம்பருத்தி பூக்களை எடுத்து அதனை வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும். அடுத்து, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இதனுடன் காயவைத்துள்ள செம்பருத்தி பூக்களை சேர்த்து கொதிக்கவிட்டு, அந்த எண்ணெய்யை வடிகட்டி நன்றாக ஆறவைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தேவைப்படும்போது தலையில் அப்ளை செய்து கொள்ளலாம்.
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |














