வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இயற்கையான முறையில் தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

Updated On: June 4, 2025 4:59 PM
Follow Us:
தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்
---Advertisement---
Advertisement

தலைவலி குணமாக 

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தலைவலி என்பது இயல்பாகவே இருக்கும். தலைவலி ஏற்பட காரணங்கள் பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளலாம். அதாவது உடல் நிலை சரி இல்லாத காரணத்தாலும் மற்றொன்று மன அழுத்தம் காரணத்தால் தான் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது.  தலைவலி என்பது இப்போது ஒரு சாதாரணமானதாக ஒன்றாகிவிட்டது. தொடர்ந்து தொலைகாட்சி, அலைபேசி மற்றும் கணினியை அதிகமாக பார்த்துக் கொண்டே இருப்பதால் கூட தலைவலி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம்.

அதுமட்டும் இல்லாமல் ஒற்றை தலைவலி கூட இன்று பலருக்கும் இருக்கும் ஒன்றாக உள்ளது. தலைவலி பிரச்சனை காரணமாக நாம் பொதுவாக மருத்துவரை தான் முதலில் அனுகுவோம். தலைவலி குறைய மருத்துவரை தான் அனுக வேண்டும் என்பது அவசியம் இல்லை, தலைவலி குறைய  (headache treatment in tamil) நாம் இயற்கை முறைகளை பயன்படுத்தி எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம் என்ன

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்

கொதிக்கும் தண்ணீரில் காபி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால்  தலைவலி குணமாகும்.

இந்த தலைவலி தீர வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும்

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

இந்த தலைவலி குறைய கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

2 மிளகை எடுத்து விளக்கில் எரித்து, இந்த புகையை சுவாசித்தால் தலைவலி மற்றும் சளி தொல்லையில் இருந்து விடுபெறலாம்.

Headache treatment in tamil

தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் விரைவில் தலைவலி குணமாகும்.

சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! Pal Vali Maruthuvam..!

தலைவலி குணமாக முள்ளங்கி சாறு எடுத்து தினமும் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

தலைவலி தீர புதினா இலையை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

தலைவலி குணமாக  டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும்

தீராத தலைவலி நீங்க வைத்தியம்: 

தலைவலியால் அடிக்கடி அவஸ்தை படுபவர்கள் தினமும் காலை உணவு அருந்துவதற்க்கு முன் 2 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் கலந்து குடிந்தால் தலைவலி குணமாகும்.

தலைவலி குறையதுளசி தலைவலியை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது, அதனால் தினமும் ஒரு கோப்பை தண்ணீரில் 4 துளசியை போட்டு நன்கு கொதிக்க வைத்த பின் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தவும். இவ்வாறு குடிப்பதால் தலைவலியில் இருந்து விரைவில் விடுபெறலாம்.

அதேபோல் தலைவலி தீர  இலவங்கம் பட்டையை கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்.

அதேபோல் தலைவலி தீர சம அளவு இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு எடுத்து நன்றாக கலந்து குடித்தால் தலைவலி குணமாகும்.

தலைவலி தீர கிராம்பு பொடியை முகர்ந்தாலும் தலைவலி குணமாகும்.

அருகம்புல் மற்றும் அருகம் புள் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை தலைவலி வலிக்கும் இடதில் போட்டால் தலைவலி சரியாகிவிடும்.

இஞ்சியை தோல் நீக்கி சின்னதாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தேன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதனை சூடான தண்ணீரில் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை குடிப்பதன் மூலம் நீண்ட நாட்களாக உங்களுக்கு தலைவலி பிரச்சனை இருந்தால் கூட அவை சரியாகும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now