வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காது அடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்

Updated On: March 18, 2025 3:14 PM
Follow Us:
Blocked Ear Reasons in Tamil
---Advertisement---
Advertisement

காது அடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பொதுவாக மனிதர்களின் காது பகுதிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன அவை, வெளிக்காது. நடுக்காது. உட்காது ஆகும். இந்த காது பகுதிகளில் கூட பலவகையான பிரச்சனைகள் ஏற்படும் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த காது பகுதில் பலருக்கு பிரச்சனைகள் ஏற்படுவது காது அடைப்பு தான். சரி இந்த பதிவில் காது அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

காது அடைப்பு காரணங்கள் – Blocked Ear Reasons in Tamil:

காது அடைப்பு காரணங்கள்

காரணம்: 1

காது அடைப்பு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் காது சவ்வில் நீர் கோர்த்துக்கொள்வதாலும், சளி சேர்வதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

காரணம்: 2

காது அடைப்பு எதனால் வருகிறது என்றால் சில சமயங்களில் காதில் சேரும் மெழுகினாலும் காது அடைப்பு ஏற்படுகிறது. அதாவது காதுக்குள் சுரக்கும் அதிகமான மெழுகுகள், காதிற்குள் செல்லும் குழாயில் அடைத்துக்கொண்டு ஒலி அலைகள் செல்வதை தடுக்கும். இதனால் பாதி காதுதான் நமக்கு கேட்கும்.

காரணம்: 3

காது அடைப்பு எதனால் வருகிறது என்றால் சளி தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் வேகமாக தும்முவதன் மூலமும் காது அடைப்பு ஏற்படுகிறது.

காரணம்: 4

செவிக்கால்வாயில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுகள், சைனஸ் பிரச்சனை, வீக்கமடைதல், சதை வளர்ச்சி போன்றவற்றாலும் காது அடைப்பு பிரச்சனை ஏற்படுகிறது, இது சில சமயங்களில் காது பகுதியில் ஒருவகையான  இரைச்சலை உண்டாக்கும்.

காரணம்: 6

காது அடைப்பை எளிதாக எண்ணி விட்டுவிட்டால், காதில் புகும் நீர் மற்றும் சளியால், சீழ் பிடித்து மூளைக்கு செல்லும் நரம்பில் நோய்த் தொற்று ஏற்பட்டு மூளைகாய்ச்சலை உண்டாக்கும். ஆகவே இத்தகைய  பிரச்சனையை யாரும் சாதரணமாக நினைக்கக்கூடாது.

குறிப்பு:

காதில் நோய் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறியே காது அடைப்பு என்று சொல்லலாம். காது அடைப்பை அலட்சியமாக நினைத்தால், அது நிரந்தர காது கேளாமைக்கு வழிவகுக்கும்.

இந்த பிரச்சனை ஒரு முறை, இரு முறை வந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை ஒருவருக்கு இருக்கிறது என்றால் கட்டாயம் காது சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது நல்லது.

காது அடைப்பு ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் | Kathu Adaippu Sariyaga:

காது அடைப்பு காரணங்கள்

  1. நமது காது பகுதியை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  2. காதில் நீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  3. குளிர்ந்த காற்று காதுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  4. ஈரப்பதம் நிறைந்த இடத்திற்கு செல்லும்போது காதை பஞ்சு அல்லது காது அடைப்பான்களை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.
  5. காதினுள் அதிக மெழுகு சேர்ந்துள்ளதா என்பதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதித்துக்கொள்வது நல்லது
  6. காது பகுதில் கூர்மையான பொருட்கள், காகிதம் மற்றும் விரல் ஆகியவற்றை கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  7. காது அடைந்திருந்தால் அல்லது காதில் இரைச்சல் சத்தம் இருந்தால், வெள்ளை பூண்டில் பெரிய பல்லாக எடுத்து அடைத்திருக்கும் காதில் வைக்கவும். பூண்டு காது உள்ளே செல்லாமல் இருக்கும் படி கவனமாக இருக்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை வெளியே எடுத்தால் சத்தம் குறைந்திருக்கும். அடைப்பு நீங்கியிருக்கும்.
  8. காது வலி இருந்தால் பூண்டு பல் – 2, நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், கிராம்பு – 2 கடுகு எண்ணெயில் பூண்டு, கிராம்பு இரண்டையும் நசுக்கி சேர்த்து சிறிய வாணலியில் கலந்து சூடேற்றவும். எண்ணெயில் கிராம்பும் பூண்டும் கருப்பு நிறமாகும் வரை அதை சூடேற்றவும். பின்பு எண்ணெய் ஆரிய பிறகு காதை சுற்றி எண்ணெய் தடவ வேண்டும். இரண்டு துளி எண்ணெய் காதுக்குள் விட வேண்டும்.
  9. இப்படி செய்தால் சைனஸ் பிரச்சனையால் காது வலி இருப்பவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயை தடவினால் காதுவலி நீங்கும்.

காது அடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்:

வெங்காயத்தை சூடு செய்து அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் காதுகளில் ஏற்படும் அடைப்பை நீக்க முடியும்.

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை சூடாக்கி காதுகளில் 2 அல்லது 3 துளி  விடலாம். இதன் மூலம் காதுகளில் உள்ள அடைப்பை சரி செய்ய முடியும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதனின் ஆவி மேலே போகாதவாறு தட்டு போட்டு மூடி விட வேண்டும். இதனை ஆவி பிடிப்பதன் மூலம் காது அடைப்புசரியாகும்.

துளசி இலை 4 அல்லது 5 எடுத்து கொள்ள வேண்டும். இதன் இலைகளை அரைத்து வெறும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றை 2 துளிகள் காதுகளில் விட வேண்டும். இதன் மூலம் காதுகளில் உள்ள தொற்று சரியாகி காதுகளில் உள்ள அடைப்பை நீக்கும்.

மேல் கூறியுள்ள குறிப்பு ஆனது சாதரணமாக சளியின் காரணமாக காதில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றிருக்கு சரியாகும். அதுவே உங்களுக்கு காது அடைப்பு அதிகமாக இருந்து, வலியும் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.

காது வலி நீங்க 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now