காய்கறிகள் இல்லாமல் சுவையான குருமா செய்யலாம்.!

kurma seivathu eppadi

காய்கறி இல்லாமல் குருமா செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் குறிப்பில்  காய்கறிகள் இல்லாமல் குருமா வைப்பதை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்து சமையல் செய்யும் பெண்களுக்கு இந்த குருமா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த குருமாவை நீங்கள் சுலபமாகவும், சீக்கிரமாகவும் செய்யலாம். இந்த குருமாவை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி போன்ற எல்லாவிதமான உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். இப்படிப்பட்ட குருமாவை மிகவும் சுவையாக  எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்கள் வீட்டில் சப்பாத்தியா? மறந்துவிட்டு எப்போது போல் குருமாவை வைக்காதிங்க இதை ட்ரை பண்ணுங்க

காய்கறி இல்லாமல் குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • கடலெண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன் 
  • பட்டை-1 
  • கிராம்பு -1
  • ஏலக்காய் -1
  • பிரிஞ்சி இலை -2
  • சோம்பு- 1 ஸ்பூன்
  • பூண்டு பல்-4
  • கருவேப்பிலை -சிறிதளவு 
  • பெரியவெங்காயம்-3
  • தக்காளி-4
  • உப்பு – தேவையான அளவு 
  • மஞ்சள்தூள் – கால் டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன் 
  • மல்லித்தூள்1 ஸ்பூன் 
  • தேங்காய்- அரை முடி 
  • பச்சை மிளகாய்-3
  • பெருஞ்சீரகம்-1 ஸ்பூன் 

தக்காளி குருமா செய்வது எப்படி.?

ஸ்டேப்:1

முதலில் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயை வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் மூன்று ஸ்பூன் கடலை எண்ணெயை சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய் போன்றவற்றை கடாயில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக அதில் நான்கு பல் பூண்டு எடுத்து மசிச்சு கொண்டு அதை கடாயில்  சேர்க்க வேண்டும். அதன்பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கி  முடித்ததும் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்:3

இந்த வெங்காயத்தை ஒரு 10 நிமிடம் நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் பொன்னிறம் வந்ததும் அதில் நான்கு பெரிய தக்காளியை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி கடாயில் சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்:4

தக்காளியை கொஞ்சம் அரைகுறையாக வதக்க வேண்டும். நன்றாக வதக்க வேண்டாம். இப்படி வதக்குவதினால் குருமா மிகவும் சுவையாக இருக்கும். வெங்காயம், தக்காளி கொஞ்சம்  வதங்குவதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்:5

அடுத்ததாக வெங்காயம், தக்காளி வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,  சேர்த்து  நன்றாக வதங்கிய பிறகு மல்லித்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய பிறகு உங்களுக்கு எவ்வளவு குருமா வேண்டுமோ அந்த அளவுக்கு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

ஸ்டேப்:6

தண்ணீர் சேர்த்து  பிறகு நன்றாக கலக்கி விட வேண்டும். கடைசியாக இதில் சுவையாக இருக்க ஒரு மசாலா சேர்க்க வேண்டும். அரை மூடி  தேங்காய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும். அரைத்த பிறகு அதை கொதிக்கும் குருமாவில் கலந்து விட வேண்டும்.  அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அவ்ளோ தாங்க குருமா ரெடி.!  பரிமாறி சாப்பிட வேண்டியது தான்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil