வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால் | Pambu Parthal Palan

Updated On: November 21, 2025 5:20 PM
Follow Us:
Pambu Parthal Palan
---Advertisement---
Advertisement

வெள்ளிக்கிழமை பாம்பு பலன்

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம் பொதுவாக நம் முன்னோர்கள் வெளியில் செல்லும் வேலை முடிந்தால் அதனை பற்றி எதுவும் பேசுவது இல்லை. அதே நேரத்தில் போகும் வேலை முடியவில்லை என்றால்? இன்று நான் எழுந்ததும் கண் முழித்த முகம் சரி இல்லை என்றும், நான் செல்லும் நேரத்தில் அவர்கள் வந்தார்கள் அதனால் தான் நான் போகும் வேலை முடியவில்லை என்றும் சொல்வார்கள்.

அதே போல், சகுனம் என்பது பஞ்ச பூதங்கள் முதல் ஐந்து அறிவு ஜீவன்கள் வரை இயற்கையின் ஆதாரமாய் விளங்கும் உயிரினங்களின் அசைவை பொறுத்து நல்லது, கெட்டதை தீர்மானிப்பது ஆகும். சகுனங்கள் என்னவாக இருந்தாலும் சென்ற காரியத்தில் வெற்றி கிடைத்தால் அதை யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.வெளியில் செல்லும் நேரத்தில் பூனை பார்த்தாலோ, அல்லது வெள்ளி கிழமை நாகத்தை பார்த்தாலோ அதை நினைத்து மனதில் சிறு குழப்பத்துடன் அந்த நாட்கள் முழுவதும் யோசிப்பார்கள், அப்படி வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாங்க.

கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்

வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால்:

  • பாம்பு பார்த்தால் படையே நடுங்கும். பாம்பு சாதாரண உயிரினம். ஆனால் அது கடித்தால் விஷம் என்பதால் அதனை பார்த்தால் அனைவரும் அச்சம் கொள்கிறார்கள். பாம்புக்கென்று பல சாஸ்திரங்கள் இருக்கிறது. எந்தெந்த நாளில் பார்த்தால் என்ன பலன் என்று ஆன்மீகத்தில் இருக்கிறது. ஒருசிலர் பாம்பை பார்த்து விட்டால் பதறுவார்கள். நமக்கு என்ன நடக்க போகிறதோ என்று. அதனால் கீழே வெள்ளி கிழமை அன்று பாம்பு பார்த்தால் என்ன பலன் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

பாம்பு பார்ப்பது நல்லதா கெட்டதா

  • ஆனால் ஒரு சிலர் கண்களில் பாம்பு அடிக்கடி தென்படும். அப்படி வெள்ளிக்கிழமை அடிக்கடி பாம்பை கண்டால் கால சர்ப்ப தோஷம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தில் பார்க்க வேண்டியது அவசியம்.
  • சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு பாம்புகளால் அடிக்கடி பிரச்சனைகள் வரும், கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.
  • அதுமட்டுமில்லாமல் திருமணம் தடைப்படும், குழந்தை பாக்கியம் பெறும் வாய்ப்புகள் தள்ளி போகும்.
  • அடிக்கடி பாம்பு பார்த்தால் உடனே ஜாதகத்தை பார்த்து கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் இருப்பவர்கள் ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்து வந்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
  • பாம்பு குறுக்கே சென்றால் எதிர்பார்த்த சில பலன்கள் காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால்

  • அதிகளவு அடிக்கடி நாகத்தை பார்ப்பவர்களுக்கு கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் சில கோவில்களில் மரத்தடியில் நாகத்தை வைத்து வழிபடுபவர்களை பார்த்திருப்போம், அந்த கோவிலுக்கு சென்று அந்த நாகத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு வர நாகத்தால் உள்ள தோஷத்தையும் குறைக்கலாம் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும்.
கனவில் பணம் கண்டால் என்ன பலன்
  • உங்களால் முடிந்தவரையில் கோவில்களுக்கு சென்று அடிக்கடி உங்கள் கைகளால் குங்குமம் மற்றும் மஞ்சள் அர்ச்சனை செய்யலாம். அப்படி செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம், வேலையின்மை போன்ற பிரச்சனைகளிருந்து விடுபடலாம். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி உங்கள் கண்களில் பாம்புகள் வராது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now