Meikal Purampoku Endral Enna | மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்றால் என்ன?
ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பெயருண்டு, அதனை அந்த நிலத்தின் அடிப்படை கொண்டு வகைப்படுத்திருப்பார்கள். நிலங்களை நிறைய வகைகளாக பிரிப்பார்கள் இந்த பதில் நாம் பார்க்க இருப்பது மேய்க்கால் புறம்போக்கு என்றால் என்ன என்பதை பற்றித்தான். நீங்களும் meikal purampoku nilam endral enna என்று தேடிவருகின்றனர், உங்களுக்கானதுதான் இந்த பதிவு.
இந்த பதிவை முழுவதுமாக படித்து மேய்க்கால் புறம்போக்கு நிலம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்றால் என்ன?
மேய்க்கால் நிலம் என்பது கிராமத்தில் ஆடு மாடுகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும். இந்த நிலத்தை ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் என்று கூறுவார்கள். இந்த நிலங்கள் குளம்,குட்டை, வாய்க்கால்,ஏரி, கண்மாய் போன்ற நீர் வழி தடங்களில் இருக்கக்கூடிய இடமாகும். இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் சொந்தம் கொண்டாட முடியாது.
இந்த நிலங்கள் முற்றிலும் அரசாங்கம் ஆடு மாடு மேய்ப்பதற்காக ஒதுக்கிய நிலமாகும். எப்படி ஒருவர் நீர்நிலை புறம்போக்கு, மயானம், சாலை, காடுகள் போன்ற இடங்களை சொந்தம் கொண்டாட முடியாதோ, அதே போல் இந்த மேய்க்கால் இடத்தையும் சொந்தம் கொண்டாட முடியாது.
அனாதீனம் நிலம் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..?
Meikal Purampoku Endral Enna
இந்த மாதிரியான ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ, சொந்தம் கொண்டாடவோ அல்லது பட்டா கோரவோ முடியாது. சமீபமாக மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் இனி ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. எக்கச்சக்கமான மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ளன.
ஒருவேளை காலம் காலமாக மக்கள் இந்த நிலத்தில் வசித்து வந்திருந்தார்கள் என்றால் அவர்களுக்கு அரசே புது இடத்துடன் கூடிய வீட்டை கட்டி கொடுத்தால் இந்த மேய்க்கால் புறம்போக்கு ஆக்ரமிப்பு குறையும்.
அரசாங்கம் இதுவரைக்கும் இது போல் நிறைய மக்களுக்கு வீட்டினை கட்டி கொடுத்திருக்கிறார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |