அமாவாசை அன்று ஏன் கோலம் போடக்கூடாது..? | Why not Put Kolam on the Door on Amavasya in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அமாவாசை அன்று கோலம் போடலாமா.? போடக்கூடாதா.? என்பதையும் அதற்கான காரணத்தையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். அமாவாசை அன்று கோலம் போடுவதில் பலபேருக்கு குழப்பம் இருக்கும். இப்பதிவை படித்து அந்த குழப்பத்தை போக்கி கொள்ளுங்கள்.
தினமும் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் போடுவது அக்காலத்திருந்து வழக்கமாக இருக்கிறது. தினமும் அதிகாலையில் வாசலில் கோலமிட்டு வழிபட்டால் தெய்வகடாச்சம் நிறைந்திருக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் தினமும் கோலம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் அமாவாசை அன்று மட்டும் ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று சொல்கிறார்கள். வாருங்கள், எதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று உண்மை காரணத்தை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
அமாவாசை அன்று ஏன் வீட்டில் கோலம் போடக்கூடாது..?
பொதுவாக நம் வீட்டு வாசலில் கோலம் போடுவது தெய்வத்தை வணங்குவதையும், மகிழ்ச்சியாக இருப்பதையும் உணர்த்துகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் இதை பின்பற்றி வந்தனர்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ அமாவாசை நாட்கள் நேரம்
எனவே ஒவ்வொரு மனிதனும் இதனை தினமும் செய்யவிட்டாலும், அமாவாசை அன்று இறந்த நம் முன்னோர்களை வழிபட்டு தானம் தருமங்களை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிருக்கிறார்கள்.
மறைந்த நம் முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க நம் இல்லத்திற்கு வருவார்கள். அவர்களின் பசி, தாகம் தனிய எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது அதை அவர்கள் ஏற்று கொண்டு நம்மை ஆசிர்வதிப்பார்கள்.
பொதுவாக அமாவாசை என்பது, சந்திரன் இல்லாத இருள் சூழ்ந்த இருந்தாலும், நம்முடைய பித்துருக்களுக்கான முன்னோர்களை வழிப்பட உகந்த நாளாக இருக்கிறது. என்னதான் நம் முன்னோர்களை நாம் தெய்வமாக கருதி வழிபட்டாலும், இறந்தவர்களை எதிர்மறை சக்தியாகத் தான் தெய்வீக சக்திகள் கருதுகிறது.
அமாவாசை நாள் என்பது முற்றலும் நம் பித்ருக்களை வழிபட வேண்டிய நாள். அந்நாளில் மற்ற தெய்வங்களை வழிபட கூடாது.. நாம் தெய்வ வழிபாடு செய்யும்போது கோலம் போட்டால் அது தெய்வங்களை வீட்டிற்குள் அழைக்கும் முறை ஆகும். அதுவே, நம் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வரும்போது கோலம் போட்டால், நம் முன்னோர்கள், நம் குடும்பத்தினர் இந்நாளை நமக்காக ஒதுக்கவில்லை, அவர்கள் வேறு தெய்வத்தை வணங்க உள்ளார்கள் என்று எண்ணி கோபமடைந்து வீட்டிற்குள் வராமல் போய்விடும். இதுவே, அமாவாசை அன்று வீட்டில் கோலம் போடாமல் இருப்பதற்கான காரணம்.
அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் என்ன ஆகும் தெரியுமா..?
அமாவாசை அன்று தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:
அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவது, மணி அடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை எல்லாம் நம் முன்னோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |