Poonaikali Seeds Benefits and Side Effects in tamil
நமது உடலானது மிகவும் ஆரோக்கியத்துடனும் நன்கு வலுவுடனும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமது உணவு முறை சரியாக இருக்க வேண்டும். அதாவது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிக அளவு புரதசத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலவகையான உணவுகளை நாம் நமது அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அப்படி நாம் நமது உடலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்று நினைத்து உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்தினை அளிக்குமா என்றால் அது சிறிதளவு சந்தேகம் தான்.
அதற்கு முதலில் நாம் எவ்வற்றையெல்லாம் உட்கொண்டால் நமக்கு என்னென்ன நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் பூனைக்காலி விதையை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
கடுக்காய் பொடியை பயன்படுத்துவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
பூனைக்காலி விதை நன்மைகள்:
ஜீரண சக்தி மேம்படும்:
பொதுவாக இந்த பூனைக்காலி ஜீரண உறுப்புகளின் மென்மையான தசை சுருக்கங்களை சீராக்கி, மலம் எளிதாக வெளியேறச் செய்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பார்க்கின்சன் நோய்யை கட்டுப்படுத்த:
இந்த பூனைக்காலி விதைகளில் இயற்கையாகவே லெவோடோபா எனப்படும் எல்-டோபா 4% முதல் 7% சதவிகிதம் என்ற விகிதத்தில் உள்ளது. மேலும் இது ஹாலுசினோஜெனிக் டிரிப்டமின்கள், பீனால்கள் மற்றும் டானின்கள் போன்ற கலவைகளையும் கொண்டுள்ளது.
இதில் உள்ள எல்-டோபா பார்கின்சன் நோய் சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது:
இந்த விதையில் உள்ள ப்ரூரினினைன் போன்ற அல்கலாய்டுகள், இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
இனப்பெருக்க திறன் அதிகரிக்க:
பூனைக்காலி விதை இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த டானிக் ஆகும். இது ஆன் பெண் என இருவருக்கும் கருவுறுதல், ஆரோக்கியமான விந்து மற்றும் கருமுட்டை, இனப்பெருக்க உறுப்புகளின் சரியான செயல்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதில் உதவுகிறது.
தினமும் ஒரு கிளாஸ் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா
இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது:
இந்த பூனைக்காலி விதைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள லெவோடோபா, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உதவுகிறது.
பூனைக்காலி விதை தீமைகள்:
பொதுவாக இந்த உலகில் உள்ள எந்த ஒரு பொருளானாலும் அதற்கு நன்மை மற்றும் தீமைகள் என இரண்டும் காணப்படும் அதைபோல் தான் நமக்கு பலவகையான நன்மைகளை அளிக்கும் பூனைக்காலி விதையாலும் நமக்கு ஒரு சில தீமைகள் நிகழும் அவற்றை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..
பூனைக்காலி காய்களின் முடி வாய்வழியாகவோ அல்லது மேற்பூச்சாகப் பயன்படுத்தவோ கூடாது. ஏனெனில் இது எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களுக்கு ஏதேனும் உடல்நல குறைபாடுகள் இருந்தால் இந்த பூனைக்காலி விதையை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்றுக்கொள்ளுங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பூனைக்காலி விதை பயனப்டுத்துவதற்கு முன்னால் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்றுக்கொள்ளுங்கள்.
பொதுவாக இருதய நோய், நீரிழிவு நோய், இரத்தச் சர்க்கரைக் குறைவு, கல்லீரல் நோய், மனநோய், அல்சர் போன்ற உடல் நலக் கோளாறு உடையவர்களுக்கி பூனைக் காலி பரிந்துரைக்கப் படுவதில்லை.
பூனைக்காலி விதை இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் மாறுதலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் முன்னால் பூனைக்காலி உண்பதை தவிர்க்க வேண்டும்.
பூனைக்காலி விதை பெண்கள் சாப்பிடலாமா.?
பெண்கள், பூனைக்காலி விதையை சாப்பிடலாம். இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
ரணகள்ளி தாவரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |