மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி
இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்திற்கும் பிறப்பு என்பது ஒரு முறை தான். இந்த பிறப்பில் அத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இன்பம், துன்பம், கவலை எல்லாமே நிறைந்ததாக தான் இருக்கும். இதில் எல்லாமே கடந்து தான் வர வேண்டியிருக்கும். இந்த வாழ்க்கையில் அனைவருமே நினைத்து கொண்டே இருப்பது நாம் எப்போ மகிழ்ச்சியாக இருப்பது என்று தனக்குள் கேட்டு கொண்டே இருப்பார்கள், நமது வாழ்க்கை எப்போ மாறும் என்று தனக்குள் கேட்டு கொண்டே இருப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது எப்படி.?
ஆசைப்பட்ட பொருள்:
நாம் ஆசைப்பட்ட பொருட்களை காசு கொடுத்து அந்த பொருள் எங்கே கிடைக்கிறதோ அங்கே வாங்கி விடுவோம். ஆனால் நமது வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தை எங்கேயும் சென்று வாங்க முடியாது. ஏனென்றால் அவை நமக்குள் இருக்கிறது. நாம் அதை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இதில் பொருட்களை வாங்குவதும், பதவி கிடைக்காத, முதல் மார்க் எடுத்து விட மாட்டோமா என்று ஏங்கி தவிக்கிறார்கள்.
மகிழ்ச்சியை நாம் எங்கே சென்றும் வாங்க முடியாது. அவை நமக்குள் இருக்கிறது அதை நாம் வெளிப்படுத்துகிறமோ என்பது தான் சந்தேகம்.
மனஅழுத்தம் நீங்கி தூக்கம் நன்றாக வர இதை செய்யுங்க..!
மன கஷ்டம்:
வீட்டில் உள்ள கஷ்டம், வேலையில் உள்ள கஷ்டம் என்று வாழ்க்கையை நினைத்து புலம்புகிறார்கள். யாரோ ஒருவர் நம்மை கஷ்டப்படுத்தி விட்டால் அதை நினைத்து கொண்டிருப்பது. இல்லையென்றால் அவர்களை பழி வாங்க வேண்டும் எண்ணம் என்று பல மனதிற்குள் புதைந்து கிடைக்கிறது.
இப்படி மனம் முழுவதும் கவலையும், பாரமும் இருந்தால் எப்படி சந்தோஷம் கிடைக்கும். நமது மனது குப்பைத்தொட்டியோ அல்லது சாக்கடையோ இல்லை. இதில் அசுத்தங்கள் இருந்தால் என்ன செய்வோம், உடனே அதை அப்புறப்படுத்துவோம் அல்லவா.!அதே போல தான் மனதில் உள்ள கஷ்டங்களையும் நீக்க வேண்டும்.
எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்:
அது போல மற்றவர்கள் உங்களை பற்றி என்ன சொன்னாலும் அதை பற்றி நினைத்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எப்படி என்று உங்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு அதை ப்ரூப் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
ஒருவர் உங்களை பற்றி புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி ஒரே மாதிரியாக எடுத்து கொள்ளுங்கள். புகழும் போது தலைக்கனமாக எடுத்து கொள்வதும், இகழும் போது சோர்வடையவையும் தேவையில்லை.
எல்லாரும் வாழ்க்கையிலும் கஷ்டம் உள்ளது, ஆனால் அதற்காக அதையே நினைத்து கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும்.
உங்கள் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள், உங்களின் உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கண்டிப்பாக ஒரு நாள் கிடைக்கும். மகிழ்ச்சி எங்கும் இல்லை அவை உங்களிடம் தான் இருக்கிறது.
Think Good Thoughts and Good Things Will Happen
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |