Bharat Rice Scheme 2024 Details in Tamil
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Bharat Rice Scheme 2024 பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டே Bharat Rice Scheme 2024 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 29 ரூபாய்க்கு தரமான அரிசியினை பெற்று கொள்ளலாம்.
Bharat Rice Scheme 2024 மூலம், என்னென்ன பொருட்கள் வழங்கப்படும்..? எவ்வளவு ரூபாய்க்கு வழங்கப்படும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் பாசஞ்சர் ரயில்களில் கட்டணம் குறைப்பு..! எவ்வளவு தெரியுமா..?
பாரத் அரிசி திட்டம்:
மத்திய அரசு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் சில்லறை சந்தையில் ஒரு கிலோ அரிசியை ரூ. 29-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் அரிசி விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் மானிய விலையில் அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் சில்லறை சந்தையில் ரூ.29 மானிய விலையில் அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக சில்லறை சந்தை விற்பனைக்கு ரூ.5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்படி ஒதுக்கீடு 5 லட்சம் டன் அரசியில் 5 கிலோ பை மற்றும் 10 கிலோ பை அடங்கும். அதுமட்டுமன்றி பாரத் அரிசியை இணைய வழியிலும் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மொபைல் போன் எண்ணை பதிவு செய்வதன் மூலம் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்த அரிசியை, ரிலையன்ஸ், பிளிப்கார்ட், பிக் பாஸ்கட் மற்றும் ஆன்லைனிலும் வாங்கலாம்.
EB தொடர்பான புகார்களை வீட்டிலிருந்தே தெரிவிக்கலாம்.. மின்வாரியத்தின் புதிய அறிவிப்பு!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |